மறுபடியும் குடையை கையில் எடுங்க .. டமால் டுமீல் மழை வருது.. வானிலை தகவல்!

Jul 08, 2023,10:48 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்குப் பரவலாக மிதமான மழை பெய்யவுள்ளதாக வானிலை ஆய்வு மையமும், தமிழ்நாடு வெதர்மேனும் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக தென் மேற்குப் பருவ மழை வெளுத்துக் கட்டி வந்தது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளக்காடாகியது.  வயநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் கபிணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்கு நல்ல மழை கிடைத்தது.

கேரளாவில் மழை கொட்டித் தீர்த்ததால் குற்றாலம் அருவிகளுக்கும் நல்ல மழை கிடைத்தது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தமிழ்நாடு மாவட்டங்களுக்கும் நல்ல மழை கிடைத்தது. 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பரவலமாக மிதமான மழை பெய்யும் என்றும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள தகவலில், கேரளாவில் பெய்து வரும் பெரும் மழை இன்றுடன் சற்று ஓயும் என்று தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ட்வீட்டில், கேரளாவில் பெய்து வரும் கன மழைக்கு இன்றே கடைசி நாள். வயநாடு, கபிணி அணைப் பகுதியில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. வடக்கு கேரளாவில் உள்ள கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்யும்.

தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,பிற வடக்கு மாவட்டங்கள், உட்புற மாவட்டங்களில் நாளை முதல் மழைக்கு வாய்ப்புள்ளது. கேரளாவில் நாளை முதல் மழை குறையும். அதேசமயம், தமிழ்நாட்டில் டமால் டுமீல் மழை தொடங்கும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.

சமீபத்திய செய்திகள்

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்