ரூ.2000 நோட்டுக்களை ஈஸியாக மாற்றலாம்.. வதந்திகளை நம்பாதீங்க.. எஸ்பிஐ அறிவிப்பு

May 22, 2023,01:16 PM IST
டெல்லி : ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவது தொடர்பாக சோஷியல் மீடியாவில் பரவி வரும் தவறான தகவல்களை பொது மக்கள் யாரும் நம்ம வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள எஸ்பிஐ வங்கி, ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவது தொடர்பான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கு செப்டம்பர் 30 ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கு படிவத்தை பூர்த்தி செய்து, அதோடு ஆதார் போன்ற அடையாள சான்றை அளிக்க வேண்டும் என சோஷியல் மீடியாக்களின் தகவல் பரவியது.



இதனையடுத்து இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவதற்கு எந்த அடையாள சான்றும் அளிக்க வேண்டியது கிடையாது. ரூ.20,000 வரையிலான ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கும், டெபாசிட் செய்வதற்கும் எந்த அளவு கட்டுப்பாடும் கிடையாது. 

ஒருவர் ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் ரூ.20,000 வரையிலான ரூ.2000 நோட்டுக்களை எத்தனை முறை வேண்டுமானாலும் வரிசையில் நின்று மாற்றிக் கொள்ளலாம். ஒருமுறை வரிசையில் நின்று ரூ.20,000 வரையிலான ரூ.2000 நோட்டுக்களை மாற்றி விட்டு, மீண்டும் அதே வரிசையில் நின்று ரூ.20,000 வரையிலான நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். ஒரு நாளில் இத்தனை முறை தான் வர வேண்டும், இவ்வளவு தொகை தான் மாற்ற முடியும் என்ற அளவு கிடையாது என எஸ்பிஐ வங்கி பொது மக்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளது.

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் மட்டுமல்ல, வாடிக்கையாளர் அல்லாதவர்களும் எந்த வங்கி கிளைக்கு வேண்டுமானாலும் சென்று  ரூ.20,000 வரையிலான ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூ.2000 நோட்டுக்களை மாற்றுக் கொள்வதற்கு தனியாக கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்