தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு.. 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு!

Jun 12, 2023,09:11 AM IST
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

முன்னதாக ஜூன் 1ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், 5ம் தேதி 1 முதல் 5ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் கடும் வெயில் நிலவி வந்ததால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.



அதற்கேற்ப தமிழ்நாட்டிலும் பல்வேறு நகரங்களில் 100 டிகிரியைத் தாண்டியே வெயில் வெளுத்துக் கொண்டிருந்தது. சென்னையில் வரலாறு காணாத வகையில் 108 டிகிரிக்கெல்லாம் வெயில் வெளுத்து வாங்கியது. இதையடுத்து பள்ளிகள் திறப்பை மறு பரிசீலனை செய்த தமிழ்நாடு அரசு திறப்பை 12ம் தேதிக்கும், 14ம் தேதிக்கும் ஒத்திவைத்தது.

தொடர்ந்து வெயில் சற்றும் குறையாமல் அடித்துக் கொண்டிருப்பதால், இதுவும் கூட தள்ளிப் போகுமா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு தெளிவுபடுத்தியது. இதைத் தொடர்ந்து இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  பள்ளிகள் திறக்கப்படுள்ளன. வகுப்புகள் மீண்டும் தொடங்கவுள்ளதால் மாணவர்கள் நேற்றே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து ஆயத்தமாகும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

முதல் நாளிலேயே பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கனவே எல்லாமே தயார் நிலையில் இருப்பதால் அதில் சிரமம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்