சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு ஜூன் 5ம் தேதியும், பிற வகுப்புகளுக்கு ஜூன் 1ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது கடும் வெயில் கொளுத்தி வருவதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் திட்டமிட்டபடியே பள்ளிகள்திறக்கப்படும் என்றுஅமைச்சர் அன்பில் மகேஷ் கூறி வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை புதிய அறிவிப்பை அன்பில் மகேஷ் தெரிவித்தார்.அதன்படி பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இரு தேதிகள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அவர் தேர்வு செய்யும் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 7ம் தேதி அனைதது வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அறிவுரையின்பேரில் இந்த தேதியில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
{{comments.comment}}