சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு ஜூன் 5ம் தேதியும், பிற வகுப்புகளுக்கு ஜூன் 1ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது கடும் வெயில் கொளுத்தி வருவதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் திட்டமிட்டபடியே பள்ளிகள்திறக்கப்படும் என்றுஅமைச்சர் அன்பில் மகேஷ் கூறி வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை புதிய அறிவிப்பை அன்பில் மகேஷ் தெரிவித்தார்.அதன்படி பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இரு தேதிகள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அவர் தேர்வு செய்யும் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 7ம் தேதி அனைதது வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அறிவுரையின்பேரில் இந்த தேதியில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
மிரட்ட வரும் மோன்தா புயல்... யாருக்கு ஆபத்து... யாருக்கு மழை... தமிழ்நாட்டு நிலவரம் என்ன தெரியுமா?
விலை உயர்வு எதிரொலி.. பழைய தங்க நகைகளைப் போட்டு.. புது நகை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!
அமைதி பலவீனம் அல்ல.. காந்தியின் ஆயுதம் அதுதான்.. நோபல் வென்ற வெனிசூலா தலைவர் புகழாரம்
தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
{{comments.comment}}