சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு ஜூன் 5ம் தேதியும், பிற வகுப்புகளுக்கு ஜூன் 1ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது கடும் வெயில் கொளுத்தி வருவதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால் திட்டமிட்டபடியே பள்ளிகள்திறக்கப்படும் என்றுஅமைச்சர் அன்பில் மகேஷ் கூறி வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை புதிய அறிவிப்பை அன்பில் மகேஷ் தெரிவித்தார்.அதன்படி பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இரு தேதிகள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அவர் தேர்வு செய்யும் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 7ம் தேதி அனைதது வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அறிவுரையின்பேரில் இந்த தேதியில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!
பெயரளவிலான பெயர்கள்!
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}