சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதமானது, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நீதிபதி நிஷா தீர்ப்பளித்த நிலையில், அவரது கைது சரியான நடவடிக்கையே என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இதையடுத்து 3வது நீதிபதி விசாரணைக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நெஞ்சு வலி வந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு இருதய பைபாஸ் அறுவைச் சிகிச்சையும் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருக்கிறார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது அமலாக்கத்துறையின் கைது சட்டவிரோதமானது. எந்தவிதமான நடைமுறைகளையும் அது கடைப்பிடிக்கவில்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டிருந்தது. அமலாக்கத்துறை சார்பில் தங்களது நடவடிக்கையை நியாயப்படுத்தியும், செந்தில் பாலாஜி தரப்பு ஒத்துழைப்பு தர மறுத்ததால்தான் வேறு வழியின்றி கைது செய்யப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இரு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பை வழங்கினர். நீதிபதி நிஷா பானு அளித்த தீர்ப்பில் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது, உடனடியாக செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கு நேர் மாறாக, கைது நடவடிக்கை சரியானதே என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி தனது உத்தரவில் கூறியிருந்தார்.
இரு நீதிபதிகளும் முரணான தீர்ப்பை அளித்ததால் இந்த வழக்கு 3வது நீதிபதியின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}