செந்தில் பாலாஜி மீதான ஆட்கொணர்வு மனு .. மீண்டும் இன்று ஹைகோர்ட்டில் விசாரணை

Jun 27, 2023,10:54 AM IST
சென்னை:  அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனு மீது இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கில் அவரது இருப்பிடங்களில், முதலில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையைத் தொடர்ந்து  அவரிடம் விசாரணை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதும் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி கதறி அழுதார் செந்தில் பாலாஜி. இதையடுத்து அவரை அரசினர் ஓமந்தூராரர் மருத்துவமனைக்கு கொண்டு போய்ச் சேர்த்தனர்.



இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பாக நீதிபதிகள்  நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரித்து வருகிறது. இன்று மீண்டும் விசாரணை தொடங்கி நடந்ததது.

கைது செய்யப்பட்ட பின்னர் ஒருவரால் ஆட்கொணர்வு மனு மூலம் நிவாரணம் பெற முடியாது என்று அமலாக்கத்துறை சார்பில் வீடியோ காணொளி மூலம் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டுள்ளார். அதேசமயம், இந்த கைது நடவடிக்கையே முதலில் சட்ட விரோதமானது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் எதையும் அமலாக்கத்துறை கடைப்பிடிக்கவில்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டுள்ளது.

தொடர்ந்து வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டுள்ளன. செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும் ஆஜராகியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்