அதி தீவிர புயலாக மாறியது பிபர்ஜாய்.. குஜராத் கரையை ஜூன் 15ல் கடக்கும்

Jun 11, 2023,10:55 AM IST
டெல்லி:  மிகவும் அதி தீவிர புயலாக மாறியுள்ள பிபர்ஜாய், ஜூன் 15ம் தேதி வாக்கில் குஜராத் கடற்கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அதி தீவிரமான புயலாக மாறி மேலும் வலுவடைந்த நிலையில் பிபர்ஜாய் புயலானது, அரபிக் கடலில் கிழக்கு - மத்திய பகுதியில் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் அது நகர்ந்து வருகிறது.  அடுத்த ஆறு மணி நேரத்தில் இது மேலும் அதி தீவிரமாக வலுவடைந்து நகரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயலானது குஜராத் மாநிலத்தில் ஜூன் 15ம் தேதி வாக்கில், அதி தீவிரப் புயலாக செளராஷ்டிரா மற்றும் கட்ச் கடலோரப் பகுதிகளையொட்டி கரையைக் கடக்கும் என்று தெரிகிறது. தொடர்ந்து இது நகர்ந்து பாகிஸ்தான் பக்கம் போகக் கூடும்.




தற்போது இந்தப் புயல் மும்பையிலிருந்து  600 கிலோமீட்டர் தொலைவிலும் போர்ப்ந்தர் நகரிலிருந்து 530 கிலோமீட்டர் தொலைவிலும், கராச்சியிலிருந்து 830 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இதற்கிடையே புயலை எதிர்கொள்ள குஜராத் மாநில அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அனைத்து விதமான தயார் நிலைகளையும் அது முடுக்கி விட்டுள்ளது. அதேபோல பாகிஸ்தான் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  கராச்சி துறைமுகத்தில் அவசர கால நிலை அறிவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கப்பல்களை பாதுகாப்பாக நிறுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கராச்சி துறைமுகத்தில் தற்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்