அதி தீவிர புயலாக மாறியது பிபர்ஜாய்.. குஜராத் கரையை ஜூன் 15ல் கடக்கும்

Jun 11, 2023,10:55 AM IST
டெல்லி:  மிகவும் அதி தீவிர புயலாக மாறியுள்ள பிபர்ஜாய், ஜூன் 15ம் தேதி வாக்கில் குஜராத் கடற்கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அதி தீவிரமான புயலாக மாறி மேலும் வலுவடைந்த நிலையில் பிபர்ஜாய் புயலானது, அரபிக் கடலில் கிழக்கு - மத்திய பகுதியில் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் அது நகர்ந்து வருகிறது.  அடுத்த ஆறு மணி நேரத்தில் இது மேலும் அதி தீவிரமாக வலுவடைந்து நகரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயலானது குஜராத் மாநிலத்தில் ஜூன் 15ம் தேதி வாக்கில், அதி தீவிரப் புயலாக செளராஷ்டிரா மற்றும் கட்ச் கடலோரப் பகுதிகளையொட்டி கரையைக் கடக்கும் என்று தெரிகிறது. தொடர்ந்து இது நகர்ந்து பாகிஸ்தான் பக்கம் போகக் கூடும்.




தற்போது இந்தப் புயல் மும்பையிலிருந்து  600 கிலோமீட்டர் தொலைவிலும் போர்ப்ந்தர் நகரிலிருந்து 530 கிலோமீட்டர் தொலைவிலும், கராச்சியிலிருந்து 830 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இதற்கிடையே புயலை எதிர்கொள்ள குஜராத் மாநில அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அனைத்து விதமான தயார் நிலைகளையும் அது முடுக்கி விட்டுள்ளது. அதேபோல பாகிஸ்தான் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  கராச்சி துறைமுகத்தில் அவசர கால நிலை அறிவிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கப்பல்களை பாதுகாப்பாக நிறுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கராச்சி துறைமுகத்தில் தற்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்