சித்தராமையா ஆட்சியமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு.. நாளை மதியம் பதவியேற்பு விழா!

May 19, 2023,09:22 AM IST
பெங்களூரு: கர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள சித்தராமையாவை ஆட்சியமைக்க ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அழைப்பு விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

கர்நாடக மாநில சட்டசபைக்கு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்று பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அடுத்த முதல்வராக சித்தராமையாவை கட்சி மேலிடம் தேர்ந்தெடுத்தது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு கர்நாடக சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில் முறைப்படி சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டார்.



இதையடுத்து சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சென்று சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கினர். அந்தக் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் கெலாட், ஆட்சியமைக்குமாறு சித்தராமையாவைக் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து நாளை பிற்பகல் 12.30 மணியளவில் பெங்களூரு கன்டீரவா உள்ளரங்க மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும். அதில் முதல்வராக சித்தராமையா பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார். இதே விழாவில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் துணை முதல்வராக பொறுப்பேற்பார். 

இவர்களுடன் சிறிய அளவிலான அமைச்சரவையும் பதவியேற்றுக்  கொள்ளும் என்று ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்