ஒரு வழியாக கேரளாவிற்கு வந்தது தென்மேற்கு பருவ மழை!

Jun 08, 2023,03:21 PM IST
டில்லி : கேரளாவில் இன்று தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வழக்கத்தை விட ஒரு வாரம் தாமதமாக பருவமழை துவங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைபர்ஜோய் புயல், பருவமழையின் தீவிரத்தை பாதித்து வருவதாகவும், இந்த தாக்கம் காரணமாக கேரளாவில் மழையின் தீவிரம் குறையும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் முன்பு கூறி வந்தனர். இந்நிலையில், இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 08 ம் தேதியான இன்று தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளது.



அதே சமயம் தெற்கு அரபிக் கடல் மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதி, லட்சத்தீவு, கேரளாவின் பெரும்பாலான பகுதிகள், தமிழகம், மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் முன்கூட்டியே பருவமழை துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வழக்கமாக ஜூன் 1ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக ஜூன் 04 ம் தேதி துவங்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால் அதை விடவும் தாமதமாக ஜூன் 08 ம் தேதி துவங்கி உள்ளது. 

கடந்த 150 வருடங்களாக கேரளாவில் பருவமழை துவங்கும் தேதி மிகவும் மாறுபட்டு வருகிறது. 1918 ம் ஆண்டுகளில் மே 11 ம் தேதிக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை துவங்கி கேரளா முழுவதும் பரவலாக பெய்ய துவங்கியது. 1972 ம் ஆண்டு முதல் ஜூன் 18 என்ற அளவில் தாமதமாகவே பருவமழை துவங்கி வருவதாக வானிலை மைய புள்ளி விபரம் தெரிவிக்கிறது. 

கடந்த ஆண்டு மே 29 ம் தேதியும், 2021 ல் ஜூன் 3 ம் தேதியும், 2020 ல் ஜூன் 01 ம் தேதியும், 2019 ல் ஜூன் 8 ம் தேதியும், 2018 ல் மே 29 ம் தேதியும் பருவமழை துவங்கியது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கி உள்ளதால் வடமேற்கு பருவமழையும்  தாமதமாகும் என சொல்ல முடியாது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தாமதமாக துவங்கி உள்ள பருவமழை, மழை அளவில் எந்த பாதிப்பையையும் ஏற்படுத்தாது. இந்த ஆண்டு இந்தியா முழுவதும் சராசரி என்ற அளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வடமேற்கு பருவமழை சற்று குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்