சென்னை : நடிகர் தனுஷ் தற்போது டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்தில் நடித்து வருகிறார். இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த மாத இறுதிக்குள் படத்தின் முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தனுஷ் அடுத்ததாக நடிக்க உள்ள அவரின் 50 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், பெரிய பட்ஜெட் படமாக இந்த படம் தயாரிக்கப்பட உள்ளதாகவும் கடந்த சில வாரங்களாக சோஷியல் மீடியாக்களில் தகவல் பரவி வந்தது. இதனால் தனுஷை அடுத்து இயக்க போவது யார்? சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்க போகிறது என அனைவரும் ஆர்வமாக கேட்டு வந்தனர்.
இந்நிலையில் தனுஷின் 50 வது படம் பற்றிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நேற்று (ஜூலை 05) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. போஸ்டருடன் வெளியான இந்த அறிவிப்பில் சன் பிக்சர்ஸ் வழங்கு, டி 50 என குறிப்பிட்டு, எழுத்து - இயக்கம் தனுஷ் என போடப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை விட, சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள போஸ்டர் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வெள்ளை நிற பேக்கிரவுண்டில் ரத்த சிவப்பு நிறத்தில் கோடுகள், பிளாக் அண்ட் ஒயிட்டில் கரடுமுரடான பாறைகளின் மீது தனுஷ் பின்னால் திரும்பி நிற்பது போது அமைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் நிறைந்த இடத்தில் தனுஷ் இருப்பது போல் கட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்த்து விட்டு ரசிகர்கள் பலர், என்ன இன்னொரு கேஜிஎஃப் எடுக்க போறாங்களா? இந்த போஸ்டரை பார்த்தால் ராக்கி பாய் அளவிற்கு ஒரு கேரக்டரில் தனுஷ் நடிக்க போறாரா என கேட்டு வருகின்றனர்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}