சென்னை : நடிகர் தனுஷ் தற்போது டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்தில் நடித்து வருகிறார். இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த மாத இறுதிக்குள் படத்தின் முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தனுஷ் அடுத்ததாக நடிக்க உள்ள அவரின் 50 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், பெரிய பட்ஜெட் படமாக இந்த படம் தயாரிக்கப்பட உள்ளதாகவும் கடந்த சில வாரங்களாக சோஷியல் மீடியாக்களில் தகவல் பரவி வந்தது. இதனால் தனுஷை அடுத்து இயக்க போவது யார்? சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்க போகிறது என அனைவரும் ஆர்வமாக கேட்டு வந்தனர்.
இந்நிலையில் தனுஷின் 50 வது படம் பற்றிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நேற்று (ஜூலை 05) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. போஸ்டருடன் வெளியான இந்த அறிவிப்பில் சன் பிக்சர்ஸ் வழங்கு, டி 50 என குறிப்பிட்டு, எழுத்து - இயக்கம் தனுஷ் என போடப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை விட, சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள போஸ்டர் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வெள்ளை நிற பேக்கிரவுண்டில் ரத்த சிவப்பு நிறத்தில் கோடுகள், பிளாக் அண்ட் ஒயிட்டில் கரடுமுரடான பாறைகளின் மீது தனுஷ் பின்னால் திரும்பி நிற்பது போது அமைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் நிறைந்த இடத்தில் தனுஷ் இருப்பது போல் கட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்த்து விட்டு ரசிகர்கள் பலர், என்ன இன்னொரு கேஜிஎஃப் எடுக்க போறாங்களா? இந்த போஸ்டரை பார்த்தால் ராக்கி பாய் அளவிற்கு ஒரு கேரக்டரில் தனுஷ் நடிக்க போறாரா என கேட்டு வருகின்றனர்.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}