செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை ஆப்பரேஷன்...அமைச்சர் தகவல்

Jun 20, 2023,10:49 AM IST
சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை (ஜூன் 21) அதிகாலை ஆப்பரேஷன் நடைபெற உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சவலி ஏற்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.



இந்நிலையில் செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுந்ரமணியன், நாளை அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆப்பரேஷன் நடைபெறும். ஆப்பரேஷன் செய்வதற்கான உடல் தகுதி பரிசோதனைகள் நேற்று இரவு நடத்தப்பட்டன. காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார்.

அதிகம் பார்க்கும் செய்திகள்