எந்த சவாலையும் சந்திக்க திமுக ரெடி...ரெய்டுக்கு நெத்தியடி பதில் கொடுத்த முதல்வர்

Jul 17, 2023,12:41 PM IST
சென்னை : ரெய்டை பார்த்த பயப்பட மாட்டோம். எந்த சவாலையும் சந்திக்க திமுக தயாராக உள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெத்தியடியாக பதிலளித்துள்ளார்.

பெங்களூருவில் பாஜக.,விற்கு எதிராக தேசிய அளவில் ஒன்று சேர நினைக்கும் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. இதில் கலந்து கொள்ள திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தயாராகி வந்தார். இந்த நிலையில் காலையிலேயே அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு நடத்தியது. 



செந்தில் பாலாஜியை தொடர்ந்து தமிழத்தில் இரண்டாவது அமைச்சருக்கும் அமலாக்கத்துறை 'செக்' வைத்துள்ளது.  இந்த பரபரப்புக்கு இடையிலும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஸ்டாலின் பெங்களூரு புறப்பட்டார். பெங்களூரு புறப்படுவதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் முதல்வரை சுற்றி வளைத்த பத்திரிக்கையாளர்கள், செந்தில் பாலாஜியை தொடர்ந்து பொன்முடி வீட்டிலும் அமாலாக்கத்துறை அதிரடி ரெய்டு நடத்தி வருவது பற்றி கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த ஸ்டாலின், அமலாக்கத்துறை சோதனை பற்றி திமுக.,வுக்கு கவலை இல்லை. எந்த சாவாலையும் சந்திக்க திமுக தயாராக உள்ளது. தன் மீதான வழக்குகளை அமைச்சர் பொன்முடி சட்டப்படி சந்திப்பார். இதெற்கெல்லாம் வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள். சமீபத்தில் பொன்முடிக்கு எதிரான இரண்டு வழக்குகளை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. 

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசை திருப்புவதற்கான தந்திரம் தான் இந்த ரெய்டு. ஏற்கனவே திமுக.,வுக்கு எதிராக கவர்னர் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தற்போது அமலாக்கத்துறையும் எங்களுக்கு எதிரான பிரசாரத்தில் இறங்கி உள்ளது. இது எங்களின் தேர்தல் வேலைகளை சுலபமாக்கி உள்ளது. இது வழக்கமாக பாஜக போடும் நாடகங்களில் ஒன்று தான். இதை பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்பட போவதில்லை என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்