ப்ளஸ் 2 மாணவர்கள் ஆப்சென்ட் ஏன்?...அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

Mar 19, 2023,04:04 PM IST
சென்னை : ப்ளஸ் 2 தேர்வு எழுதாமல் 50,000 க்கும் அதிகமான மாணவர்கள் ஆப்சென்ட் ஆன விவகாரம் தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சமீபத்தில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவங்கி, நடந்து வருகிறது. இதில் முதல் தேர்வாக மொழி பாடத் தேர்வு நடத்தப்பட்டது. பொதுத் தேர்வு துவங்கிய முதல் நாளே 50,000 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. ஒரே நாளில், அதுவும் பொதுத் தேர்வு எழுதாமல் மாணவர்கள் தவிர்த்த விவகாரம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இது தொடர்பாக விசாரைண நடத்தப்பட்டு வந்தது.



இந்நிலையில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வு எழுதாமல் மாணவர்கள் ஆப்சென்ட் ஆன விவகாரம் தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆப்சென்ட் ஆன மாணவர்களில் பலரும் தொழிற்பயிற்சி, பாலிடெக்னிக் படித்து வருகின்றனர். இருந்தும் அவர்கள் இதுவரை பள்ளிகளில் டிசி வாங்கவில்லை. இதனால் மாணவர்களின் பெயர் வருகைப் பதிவேட்டில் இருந்தது விசாரைணயில் தெரிய வந்துள்ளது.

இவர்களும் ப்ளஸ் 2 தேர்வு எழுத தகுதி பெற்றனர். அவர்களையும் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொண்டதால் தான் இவ்வளவு அதிகமான மாணவர்கள் ஆப்சென்ட் ஆனதாக தெரிகிறது. இந்த மாணவர்களின் எண்ணிக்கையை கழித்தால் தான் எவ்வளவு பேர் தேர்வு எழுதவில்லை என்பது தெரியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்