ப்ளஸ் 2 மாணவர்கள் ஆப்சென்ட் ஏன்?...அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

Mar 19, 2023,04:04 PM IST
சென்னை : ப்ளஸ் 2 தேர்வு எழுதாமல் 50,000 க்கும் அதிகமான மாணவர்கள் ஆப்சென்ட் ஆன விவகாரம் தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சமீபத்தில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவங்கி, நடந்து வருகிறது. இதில் முதல் தேர்வாக மொழி பாடத் தேர்வு நடத்தப்பட்டது. பொதுத் தேர்வு துவங்கிய முதல் நாளே 50,000 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. ஒரே நாளில், அதுவும் பொதுத் தேர்வு எழுதாமல் மாணவர்கள் தவிர்த்த விவகாரம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இது தொடர்பாக விசாரைண நடத்தப்பட்டு வந்தது.



இந்நிலையில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வு எழுதாமல் மாணவர்கள் ஆப்சென்ட் ஆன விவகாரம் தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆப்சென்ட் ஆன மாணவர்களில் பலரும் தொழிற்பயிற்சி, பாலிடெக்னிக் படித்து வருகின்றனர். இருந்தும் அவர்கள் இதுவரை பள்ளிகளில் டிசி வாங்கவில்லை. இதனால் மாணவர்களின் பெயர் வருகைப் பதிவேட்டில் இருந்தது விசாரைணயில் தெரிய வந்துள்ளது.

இவர்களும் ப்ளஸ் 2 தேர்வு எழுத தகுதி பெற்றனர். அவர்களையும் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொண்டதால் தான் இவ்வளவு அதிகமான மாணவர்கள் ஆப்சென்ட் ஆனதாக தெரிகிறது. இந்த மாணவர்களின் எண்ணிக்கையை கழித்தால் தான் எவ்வளவு பேர் தேர்வு எழுதவில்லை என்பது தெரியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்