ப்ளஸ் 2 மாணவர்கள் ஆப்சென்ட் ஏன்?...அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

Mar 19, 2023,04:04 PM IST
சென்னை : ப்ளஸ் 2 தேர்வு எழுதாமல் 50,000 க்கும் அதிகமான மாணவர்கள் ஆப்சென்ட் ஆன விவகாரம் தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சமீபத்தில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவங்கி, நடந்து வருகிறது. இதில் முதல் தேர்வாக மொழி பாடத் தேர்வு நடத்தப்பட்டது. பொதுத் தேர்வு துவங்கிய முதல் நாளே 50,000 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. ஒரே நாளில், அதுவும் பொதுத் தேர்வு எழுதாமல் மாணவர்கள் தவிர்த்த விவகாரம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இது தொடர்பாக விசாரைண நடத்தப்பட்டு வந்தது.



இந்நிலையில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வு எழுதாமல் மாணவர்கள் ஆப்சென்ட் ஆன விவகாரம் தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று விளக்கம் அளித்துள்ளார். அதில், ஆப்சென்ட் ஆன மாணவர்களில் பலரும் தொழிற்பயிற்சி, பாலிடெக்னிக் படித்து வருகின்றனர். இருந்தும் அவர்கள் இதுவரை பள்ளிகளில் டிசி வாங்கவில்லை. இதனால் மாணவர்களின் பெயர் வருகைப் பதிவேட்டில் இருந்தது விசாரைணயில் தெரிய வந்துள்ளது.

இவர்களும் ப்ளஸ் 2 தேர்வு எழுத தகுதி பெற்றனர். அவர்களையும் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொண்டதால் தான் இவ்வளவு அதிகமான மாணவர்கள் ஆப்சென்ட் ஆனதாக தெரிகிறது. இந்த மாணவர்களின் எண்ணிக்கையை கழித்தால் தான் எவ்வளவு பேர் தேர்வு எழுதவில்லை என்பது தெரியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்