பரவும் கொரோனா.. தமிழக அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் மாஸ்க் கட்டாயம்!

Mar 31, 2023,03:50 PM IST
சென்னை : ஏப்ரல் 01 ம் தேதியான இன்று முதல் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் அணிந்து வருவது கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க துவங்கி உள்ளது.  இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னேச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சமீபத்தில் கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் கூடி முக்கிய ஆலோசனை நடத்தியது. இதில் கொரோனா பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. 



இந்நிலையில் நேற்று தமிழ்நாடு மாநில சுகாதார பேரவையின் துவக்க விழாவில் கலந்து கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

ஏப்ரல் 1 முதல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள் என அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.




சமீபத்திய செய்திகள்

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்