தெலங்கானா சட்டசபை திறப்புக்கு என்னை கூப்பிடலையே.. தமிழிசை ஆதங்கம்

May 25, 2023,12:46 PM IST
சென்னை:  தெலங்கானாவில் பிரமாண்டமாக சட்டசபை கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அதற்கு எனக்கு அழைப்பு  கூட விடுக்கப்படவில்லை என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழா பெரும் சர்ச்சையாகியுள்ளது.

இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை வைத்துத்தான் புதிய நாடாளுமன்றத்தைத் திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.



குடியரசுத் தலைவர் அழைக்கப்படாத பட்சத்தில் விழாவைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 கட்சிகள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக கூட்டறிக்கையும் விடுத்துள்ளன.

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆளுநர் மாளிகையில் ஒரு பிரஸ் மீட் நடந்தது. அதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்தி அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படாதது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு தமிழிசை செளந்தரராஜன் பதிலளிக்கையில், மிக சமீபத்தில் மிகப் பிரமாண்டமாக பெரிய (தெலங்கானா) சட்டசபை திறந்து வைக்கப்பட்டது. முதல்வர்  (கேசிஆர்) திறந்து வைத்தார். எல்லோரும் கேட்டார்கள். கவர்னருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்று. இல்லை முதல்வர்தான் ஆட்சி செய்கிறார் என்று சொன்னார்கள். ஆரம்பித்து வைப்பதற்கு கூட இல்லை, அழைப்பு கூட விடுக்கப்படவில்லை. 

இப்போது அரசியல் சார்பு இல்லாதவர் ஜனாதிபதி, குடியரசுத் தலைவர் என்று சொல்கிறீர்கள். அதையே ஆளுநர்களுக்கு சொல்வதில்லை. ஆளுநர்கள் அரசியல் சார்பற்றவர்கள் என்று நாங்கள் சொன்னால் யாரும் ஒப்புக் கொள்வதில்லை. இப்போது பிரதமர் என்று வரும்போது குடியரசுத் தலைவர் அரசியல் சார்பற்றவர் என்று சொல்கிறீர்கள். இதிலேயே முரண்பாடு இருக்கிறது என்று கூறினார் தமிழிசை செளந்தரராஜன்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்