"கொளுத்தும் வெயில்".. என்ன இப்பவே பயங்கரமா இருக்கா.. இனிதான் டெரரா இருக்குமாம்!

Mar 01, 2023,01:29 PM IST
புதுடில்லி : இந்தியாவில் 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் மிக கடுமையான வெப்பம் பதிவாகி உள்ளது. இனி இன்னும் பயங்கரமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவல் பீதியை கிளப்பி உள்ளது.



பிப்ரவரி மாத நிறைவடைந்து விட்டதால் அந்த மாதத்தில் பதிவான வெப்ப நிலை பற்றிய தகவலை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு, கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே துவங்கி விடும். மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.




வழக்கத்தை விட இந்த ஆண்டு பனிப்பொழிவு, இரவு நேரங்களில் கடும் குளிர் இருந்து வந்தது. அப்போதே இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக இருக்கும் என மக்கள் பேச துவங்கி விட்டனர். ஆனால் மக்கள் நினைத்ததை விட இந்த ஆண்டு கோடை காலம் மிக கொடுமையாக இருக்கும் என இந்திய வானிலை மையமே கூறி இருப்பதால் வியாபாரிகள், வெளியில் சென்று வேலை செய்பவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் பீதி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்