2023 ம் ஆண்டு புறப்பட்டு 2022 ம் ஆண்டில் தரையிறங்கிய விமானம்.. ஹே எப்புர்றா!?

Jan 02, 2023,04:56 PM IST
சியோல் : சியோலில் இருந்து 2023 ம் ஆண்டு துவக்கத்தில் புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று அமெரிக்காவில் 2022 ம் ஆண்டில் தரையிறங்கி உள்ளது. இது டைம் மெஷின் கதை இல்லை. நிஜமாக நடந்துள்ளது. 

இது எப்படி சாத்தியம்? அது எப்படி நேரத்தில் பின்னோக்கி செல்ல முடியும்? என்ற கேள்விக்கு அறிவியல் ரீதியாக கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் விளங்கும். 

யுனைடெட் ஏர்லைன்ஸ் போயிங் 777-300 ரக விமானம் தென்கொரியாவின் சியோல் நகரில் இருந்து
2023 ம் ஆண்டு ஜனவரி 1 ம் தேதி 00.29 (நம்ம ஊர் நேரத்தில் நள்ளிரவு 12.29) மணிக்கு புறப்பட்டுள்ளது. இன்சியான் விமான நிலையத்தில் புறப்பட்ட இந்த விமானம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ
நகரில் 2022 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி மாலை 05. 01 மணிக்கு தரையிறங்கி உள்ளது. 



ஆசிய கண்டத்தில் இருந்து சர்வதேச டேட் லைனை கடந்து,  மற்றொரு நேர மண்டலத்திற்குள் விமானம் பயணித்ததால் பின்னோக்கிய இந்த பயணம் சாத்தியமாகி உள்ளது. ஆசியாவில் இருந்து அமெரிக்க கண்டத்திற்கு செல்லும் வழியில், புதிதாக பிறந்த 2023ம் ஆண்டில்  இரண்டு மணி நேரம் 13 நிமிடங்கள் விமானம் பயணித்துள்ளது. 

அதன் பிறகு சர்வதேச நேர மண்டலத்தைக் கடந்து, 180 டிகிரி க்ரீன்விச் மெரிடியன் நோக்கி விமானம் பறந்தபோது, அது 2022 ம் ஆண்டிற்குப் போய் விட்டது. மொத்தமாக ஒன்பது மணி நேரம் 46 நிமிடங்கள் இந்த விமானம் பின்னோக்கிய காலத்தில் பயணித்துள்ளது. விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. லைக்கள், கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. இயற்பியல் ரீதியிலான இந்த நேர அளவீடு மற்றும் மாறுபாடு புரியாததால் இந்த நம்ப முடியாமல் பலர் ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.

சர்வதேச அளவிலான நேரங்கள், பசிபிக் பண்டலத்தை அடிப்படையாக வைத்தே கணக்கிடப்படுவதால் இந்த "டைம் டிராவல்" சாத்தியமாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்