கேரளாவில் வேகமாக பரவும் டைப் 2 டெங்கு... 4 நாட்களில் 309 பேர் பாதிப்பு; 5 பேர் பலி

Jul 06, 2023,12:32 PM IST
திருவனந்தபுரம் : கேரளாவில் தொடர்ந்து பெய்ந்து வரும் மழையால் டெங்கு வேகமாக பரவி வருகிறது. கடந்த 4 நாட்களில் 300 க்கும் அதிகமானவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதமும் காய்ச்சலால் 23 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை மீண்டும் சூடு பிடித்துள்ளது. இடையில் சொதப்பிய பருவ மழை கடந்த 3 நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. கிட்டத்தட்ட கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் பெரு மழை பெய்து வருகிறது. குறிப்பாக வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்துக் கட்டுகிறது. இதனால் கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளப்  பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில்தான் தற்போது அங்கு டெங்கு பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில,  
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விபத்தின் படி, இதுவரை டெங்குவால் 3409 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இப்போது வரை  10,038 பேர் டெங்கு பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. டெங்கு தவிர மழை தொடர்பான எலி காய்ச்சல், டைபாய்டு உள்ளிட்ட பல காய்ச்சல்கள் பல மாவட்டங்களில் பரவி வருகிறது.

கொல்லம், கோழிக்கோடு உள்ளிட்ட 138 இடங்கள் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள இடங்களாக சமீபத்தில் கண்டறியப்பட்டன. தற்போது கேரளாவில் அதிகம் பரவி வருவது டைப் 2 டெங்கு காய்ச்சல் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்