கேரளாவில் வேகமாக பரவும் டைப் 2 டெங்கு... 4 நாட்களில் 309 பேர் பாதிப்பு; 5 பேர் பலி

Jul 06, 2023,12:32 PM IST
திருவனந்தபுரம் : கேரளாவில் தொடர்ந்து பெய்ந்து வரும் மழையால் டெங்கு வேகமாக பரவி வருகிறது. கடந்த 4 நாட்களில் 300 க்கும் அதிகமானவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதமும் காய்ச்சலால் 23 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை மீண்டும் சூடு பிடித்துள்ளது. இடையில் சொதப்பிய பருவ மழை கடந்த 3 நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. கிட்டத்தட்ட கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் பெரு மழை பெய்து வருகிறது. குறிப்பாக வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்துக் கட்டுகிறது. இதனால் கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளப்  பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில்தான் தற்போது அங்கு டெங்கு பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில,  
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விபத்தின் படி, இதுவரை டெங்குவால் 3409 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இப்போது வரை  10,038 பேர் டெங்கு பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. டெங்கு தவிர மழை தொடர்பான எலி காய்ச்சல், டைபாய்டு உள்ளிட்ட பல காய்ச்சல்கள் பல மாவட்டங்களில் பரவி வருகிறது.

கொல்லம், கோழிக்கோடு உள்ளிட்ட 138 இடங்கள் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள இடங்களாக சமீபத்தில் கண்டறியப்பட்டன. தற்போது கேரளாவில் அதிகம் பரவி வருவது டைப் 2 டெங்கு காய்ச்சல் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்