30 டிகிரி வெயிலுக்கே சுருண்டு விழுந்த ராணுவ வீரர்கள்.. லண்டனில்!

Jun 11, 2023,10:54 AM IST
லண்டன்: லண்டனில் நடந்த மன்னர் சார்லஸின் பிறந்த நாள் விழாவையொட்டிய ராணுவ அணிவகுப்பு மரியாதை ஒத்திகையின்போது  3 வீரர்கள் வெயில் கொடுமை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தனர். 

இங்கிலாந்தில் தற்போது கடும் வெயில் காலம். வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் மன்னரின் பிறந்த நாளையொட்டி ஜூன் 17ம் தேதி ராணுவ  அணிவகுப்பு மரியாதை நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதி ரிகர்சல் என்பதால் இளவரசர் வில்லியமும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

அப்போது அணிவகுப்பு மரியாதையில் கலந்து கொண்ட 3 வீரர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். கடும் வெயில் காரணமாக 3 பேரும் மயங்கி விழுந்தனர். 30 டிகிரி செல்சியஸ் அளவுக்கு லண்டனில் அப்போது வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. (சென்னையில் 42 டிகிரியைத் தாண்டி வெயில் போய்க் கொண்டிருக்கிறது என்பது நினைவிருக்கலாம்).




மயங்கி விழுந்த வீரர்களை ஸ்டிரெச்சரில் வைத்து கொண்டு சென்று சிகிச்சை அளித்து இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக டிவீட் போட்டிருந்த இளவரசர் வில்லியம், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அணிவகுப்பு ஒத்திகையில் கலந்து கொண்ட ஒவ்வொரு வீரருக்கும் பெரிய நன்றி. மிகவும் கடினமான சூழலிலும் கூட சிறப்பாக அணிவகுப்பு மரியாதை நடந்தது. அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார் வில்லியம்.

இதற்கிடையே, தெற்கு இங்கிலாந்தில் கடும் வெயில் நிலவி வருவதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

ஜூன் 17ம் தேதி நடைபெறும் அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சியில் மன்னர் சார்லஸ் கலந்து கொண்டு அதைப் பார்வையிடுவார்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்