ஒரே மேட்ச்... 4 ரெக்கார்டு... வேற லெவல் சாதனை படைத்த விராத் கோலி

May 19, 2023,12:15 PM IST
டில்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த போட்டியில் அடித்த சதத்தின் மூலம் ஒரே நாளில் நான்கு சாதனைகளை படைத்து புதிய வரலாறு படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று ஐதராபாத் மற்றும் பெங்களுரு அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இதில் 62 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் விராத் கோலி. இதில் 12 பவுண்டரிகள், நான்கு சிக்சர்களும் அடங்கும். இது ஐபிஎல் போட்டிகளில் அவர் அடிக்கும் 6வது சதம் ஆகும். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் முதலிடத்தில் இருந்தார். தற்போது விராத் கோலி அதனை சமன் செய்துள்ளார்.



இது தவிர பெங்களூரு அணிக்காக 7500 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார்.  நேற்று அடித்த சதம் மூலம் ஐபிஎல் 2023 சீசனில் 500 ரன்களை கடந்துள்ளார் கோலி. ஐபிஎல் வரலாற்றில் 6 சீசன்களில் 500 ரன்களை கடந்த வீரர் என்ற மைல்கல்லையும் கோலி கடந்துள்ளார். 

டுவென்டி 20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என ரோகித் சர்மாவின் சாதனையையும் விராத் கோலி நேற்று முறியடித்துள்ளார். நேற்று அடித்ததுடன் சேர்த்து விராத் கோலி இதுவரை டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகளில் ஏழு சதங்களை அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் தற்போது கோலி தான் முதலிடத்தில் உள்ளார்.

டுவென்டி 20 கிரிக்கெட்டில் சேஸிங்கின் போது அதிக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளது. ஒரே நாளில் அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்கு சாதனையை குவித்து விட்டதால் விராத் கோலியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்

news

காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!

news

மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்