லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த ராஜேஷ் ஷிண்டே என்ற ஊழியர், மாரடைப்பு ஏற்பட்டு இருக்கையிலிருந்து சரிந்து விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹமிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான ராஜேஷ் ஷிண்டே. இவர் ஹெச்டிஎஃப்சி வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். வழக்கம் போல பணிக்கு வந்து வேலை செய்து கொண்டிருந்தார் ராஜேஷ். சக ஊழியர்களுடன் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீர் என மயங்கியுள்ளார். அமர்ந்திருந்த இருக்கையிலேயே மயங்கிச் சரிந்தார். முதலில் இதை அக்கம் பக்கத்தில் இருந்தோர் கவனிக்கவில்லை. சிறிது நேரம் அவர் துடிதுடித்தபடி இருந்த நிலையில் பிறகுதான் சக ஊழியர்கள் பார்த்தனர். விரைந்து வந்து அவரை தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்தனர். அதன்பின்னர் சிபிஆர் முதலுதவி செய்தும் பலனளிக்காததால், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார். இதனை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வங்கியில் இருந்த கேமிராவில் என்ன நடந்தது என்பது குறித்து பார்த்துள்ளனர்.
அப்போது, சிசிடிவி காட்சிகளில் ஷிண்டேவின் சக பணியாளர்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளிப்பதையும், சிபிஆர் கொடுப்பதையும் காண்பித்துள்ளது. அதன்பின்னர் சக ஊழியர்களிடம் விசாரித்த போது, ஆரம்ப சிகிச்சைக்கு அவர் பதிலளிக்காததால், அவர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், மருத்துவமனைக்கு போகும் போதே வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறியுள்ளனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}