லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த ராஜேஷ் ஷிண்டே என்ற ஊழியர், மாரடைப்பு ஏற்பட்டு இருக்கையிலிருந்து சரிந்து விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹமிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான ராஜேஷ் ஷிண்டே. இவர் ஹெச்டிஎஃப்சி வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். வழக்கம் போல பணிக்கு வந்து வேலை செய்து கொண்டிருந்தார் ராஜேஷ். சக ஊழியர்களுடன் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீர் என மயங்கியுள்ளார். அமர்ந்திருந்த இருக்கையிலேயே மயங்கிச் சரிந்தார். முதலில் இதை அக்கம் பக்கத்தில் இருந்தோர் கவனிக்கவில்லை. சிறிது நேரம் அவர் துடிதுடித்தபடி இருந்த நிலையில் பிறகுதான் சக ஊழியர்கள் பார்த்தனர். விரைந்து வந்து அவரை தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்தனர். அதன்பின்னர் சிபிஆர் முதலுதவி செய்தும் பலனளிக்காததால், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார். இதனை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வங்கியில் இருந்த கேமிராவில் என்ன நடந்தது என்பது குறித்து பார்த்துள்ளனர்.
அப்போது, சிசிடிவி காட்சிகளில் ஷிண்டேவின் சக பணியாளர்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளிப்பதையும், சிபிஆர் கொடுப்பதையும் காண்பித்துள்ளது. அதன்பின்னர் சக ஊழியர்களிடம் விசாரித்த போது, ஆரம்ப சிகிச்சைக்கு அவர் பதிலளிக்காததால், அவர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், மருத்துவமனைக்கு போகும் போதே வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறியுள்ளனர்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}