பாந்தமாய் ஒளிரும் கயல் விழிகள்.. சிறு கீற்று போல புருவ ஜாலம்!

Mar 26, 2026,03:58 PM IST

- வ.துர்கா தேவி


நிலவின் முதல் 

ஒளித்தடம்

பதித்தது போல்

மெல்ல மின்னும் 

சின்ன நெற்றி


சிற்பியின் 

விரல்கள்

செதுக்கியது போல்

கூர்மையான நாசி


லோலாக்கு 

இன்றியும்

கவிதை எழுத 

தூண்டும் 

மெல்லிய காதுகள்




பாந்தமாய் ஒளிரும்  

கயல் விழிகள்


சிறு கீற்று போல  

புருவ ஜாலம்


சுடிதாரில் மட்டுமல்ல, 

தாவணியிலும் 

மின்னும் சொர்க்கம்


மேக ஊர்வலமாய்

அலைபாயும் 

கருங்கூந்தல்


வேகத்தையோ

வேகத்தடையையோ

எல்லாம் மறந்து

வண்டியில் 

வேகமாய் செல்லும்

காலை நேர

பதட்டத்திலும்,

இத்தனையும் 

காண தவறுவதில்லை

என் கண்கள் 


ஆம்....

மருமகளை

தேடும் காலம் 

வந்து விட்டது!


(About the Author: Durgadevi V, Graduate Teacher, GHS Nesal, Tiruvannamalai District)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்

news

அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!

news

அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது

news

கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!

news

ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!

news

ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!

news

விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது

news

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

news

"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்