பாந்தமாய் ஒளிரும் கயல் விழிகள்.. சிறு கீற்று போல புருவ ஜாலம்!

Mar 26, 2026,03:58 PM IST

- வ.துர்கா தேவி


நிலவின் முதல் 

ஒளித்தடம்

பதித்தது போல்

மெல்ல மின்னும் 

சின்ன நெற்றி


சிற்பியின் 

விரல்கள்

செதுக்கியது போல்

கூர்மையான நாசி


லோலாக்கு 

இன்றியும்

கவிதை எழுத 

தூண்டும் 

மெல்லிய காதுகள்




பாந்தமாய் ஒளிரும்  

கயல் விழிகள்


சிறு கீற்று போல  

புருவ ஜாலம்


சுடிதாரில் மட்டுமல்ல, 

தாவணியிலும் 

மின்னும் சொர்க்கம்


மேக ஊர்வலமாய்

அலைபாயும் 

கருங்கூந்தல்


வேகத்தையோ

வேகத்தடையையோ

எல்லாம் மறந்து

வண்டியில் 

வேகமாய் செல்லும்

காலை நேர

பதட்டத்திலும்,

இத்தனையும் 

காண தவறுவதில்லை

என் கண்கள் 


ஆம்....

மருமகளை

தேடும் காலம் 

வந்து விட்டது!


(About the Author: Durgadevi V, Graduate Teacher, GHS Nesal, Tiruvannamalai District)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!

news

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

news

தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!

news

மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!

news

லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

news

அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!

news

Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!

news

"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்