திண்டுக்கல்: கடுமையான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். இந்தச் சிறுவனின் உடல் உறுப்புகளை பெற்றோர்கள் தானம் அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பழனிச்சாமி. இவருக்கு 11 வயதில் கிஷோர் என்ற மகன் இருந்தார். கடந்த சில நாட்களாகவே கடும் காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக கிஷோர் திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் அந்தச் சிறுவனுக்கு காய்ச்சல் குறையவில்லை. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்தார் கிஷோர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கதறி துடி துடித்தனர். மகனை இழந்த மீள முடியாத துயரிலும் கூட, தன் மகனின் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர் கிஷோர் பெற்றோர்கள்.
இதைத் தொடர்ந்து சிறுவனின் தந்தை உடல் உறுப்புகள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக கொடுக்கப்பட்டது. தன்மகன் இறந்தாலும் அந்த சோகத்தை தங்களுக்குள் மறைத்து விட்டு பல குழந்தைகள் வாழ வேண்டும் என்ற கருணை உள்ளம் படைத்த இவர்களது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}