பஹல்காம் தாக்குதல்.. பிரதமர் மோடி தலைமையில் நாளை மீண்டும் அமைச்சரவை கூட்டம்!

Apr 29, 2025,02:22 PM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது.


கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் குவிந்தன. 


இதனைத் தொடர்ந்து இந்த தீவிரவாத தாக்குதலை கண்டித்து இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, அட்டாரி வாகா எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை தேடுதல் வேட்டையையும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.




தாக்குதல் தொடர்பாக முக்கிய நபர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு காரணம் பாகிஸ்தானின் லஷ்கர்இதொய்பா என்ற இயக்கமே காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தானின் உளவுத்துறையின் தூண்டுதலின் பேரில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.


இந்த தாக்குதல் காரணமாக இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் எந்த நேரத்திலும் போர் மூளலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.


இதற்கிடையே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். இந்த நெருக்கடியான நேரத்தில் தீவிரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையாக செயல்படுகிறோம் என்பதை நாம் காட்ட வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலையில் நாளை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் மீண்டும் கூடுகிறது. இதில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு, எல்லை மூடல், சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு என முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்