- சிவ.ஆ. மலர்விழி ராஜா
விண்ணில் எழுந்து மண்ணில்.....
விளைந்த நட்சத்திரம்.....
ஆழ் கடலில் விளைந்து அழகாய்.....
ஜொலிக்கும் முத்துச்சரம்....
ஆயிரம் அழகு கொட்டிக் கிடக்கும்
கவிதைப் பெட்டகம்.....
வாழ்க்கை என்னும் நந்தவனத்தில்...
நறுமணம் வீசும்தென்றல்....
அள்ளி அணைக்கையில்
ஆனந்த சொர்க்கம் ....

பிஞ்சு அடி எடுத்து நெஞ்சில்......
நடனமிடும் அழகு மயில்....
தாழம்பூ வின் வாசம்
உனது சுவாசம்.....
மெது மெதுவாய்
அருகில் வந்து.....
ரோஜா இதழின் பனித்துளியாய்.....
கன்னத்தில் நீ கொடுக்கும்....
முத்தத்தின் சத்தமில்லா ஈரம்.....
பட்டு உடலில் பல
வர்ண ஜாலம் .......
தத்தி தத்தி நடக்கையிலே.....
அசைந்து வரும்
ஆழி தேர்......
கொஞ்சும் மொழி பேசுகையில்.....
செந்தமிழில் மலர்ந்த கவிச்சோலை.....
இதழ் விரித்து நீ பேசும்
அத்தனையும்....
அழகான புது கவிதை....
கள்ளமற்ற உனது
சிரிப்பழகு.....
கடவுள் தந்த சொர்க்கம் நீ மட்டும் தான்....
அன்பு செல்வங்களுக்கு
எனது அன்பான....
குழந்தைகள் தின நல் வாழ்த்துகள்
(சீர்காழியைச் சேர்ந்த சிவ.ஆ.மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
நீங்க தனியாகவா வந்தீங்க பனையூர் பண்ணையார் Uncle?.. விஜய்க்கு அதிமுக கேள்வி
ரூ. 5000.. மகளிருக்கு காலையிலேயே சர்ப்பிரைஸ் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
2024,2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா முக ஸ்டாலின் அவர்களே?:எடப்பாடி பழனிச்சாமி கேள்வி!
மகளிர் உதவித்தொகை ரூ.2000 ஆக்கப்பட்டதற்கு தவெக தான் காரணம்...விஜய் சொல்லும் புதிய தகவல்
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்வு...அதிமுக மற்றும் பாஜக கடும் விமர்சனம்
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு
விஜய்யின் சேலம் பேச்சு எப்படி இருக்கு?...கூட்டத்தில் இதெல்லாம் கவனிச்சீங்களா?
திமுகவிற்கு தில்லு இருக்கா? திராணி இருக்கா? : தவெக தலைவர் விஜய் பேச்சு!
எகிப்து வரை கொடி கட்டிப் பறந்த தமிழ்... பிரமிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!
{{comments.comment}}