சென்னை: அரபிக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கத்திரி வெயில் காலமான தற்போது உருவான காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் வெப்பநிலை இயல்பை விட சற்று குறைந்து காணப்படுகிறது.
இதற்கிடையே அரபிக் கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ் பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், இது தெற்கு கொங்கன் கடல் மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதிக்கு அப்பால் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுவடைய கூடும் எனவும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைய கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
அதேபோல் வங்க கடல் பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வரும் மே 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக கூடும் எனவும், இது அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுவடைய கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Backbenchers இனி கிடையாது.. வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கைகளை போட தமிழக அரசு உத்தரவு!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.. ராஜ்யசபா எம்.பியாக ஜூலை 25ல் பதவியேற்கிறார்!
ஏர் இந்தியா விமான விபத்து.. விமானி வேண்டுமென்றே செய்திருக்கலாம்.. பாதுகாப்பு நிபுணர் பகீர் கருத்து
அதிமுக - பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.. விஜய்யையும் சேர்க்க முயற்சிப்போம்.. அமித்ஷா
அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது.. விஜய்யை மறைமுகமாக சுட்டுகிறாரா ரஜினிகாந்த்?
அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் ஆசை.. ஓய்வுபெற ரூ. 25 கோடி போதுமா?.. கலகலக்கும் விவாதம்!
அகமதாபாத் விமான விபத்து .. புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 என்ஜின்களும் பழுது.. அதிர்ச்சி தகவல்
அமலாக்கத்துறை பயம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத்தான்.. எங்களுக்கு அல்ல.. எடப்பாடி பழனிச்சாமி
தொடர் உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}