கோவை: கோவை பல்லடம் வழியே சென்ற பேருந்து ஒன்றில் பயணி ஒருவரை இறங்க சொன்ன நடத்துனரை, கீழே இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். உடனே பதறிய நடத்துனர் வேகமாக ஓடிவந்து சாரி சார்.. தெரியாம சொல்லிட்டேன்.. எனக் கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நேற்று தான் திருப்பூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில், பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் பிளஸ் டூ மாணவி ஒருவர் பேருந்தில் ஏறுவதற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒன் சி என்ற அரசு பேருந்து ஸ்டாப்பில் நிற்காமல் வேகமாக சென்றது.
உடனே பிளஸ் டூ மாணவி தேர்வு எழுத எழுதாமல் போய்விடுமோ என்ற பயத்தில் வேகமாக பேருந்தை துரத்தி ஓடியுள்ளார். மாணவி ஓடியதை பார்த்த சிலர் அதனை வீடியோவாக பதிவு செய்தனர். இது சோசியல் மீடியாவில் வைரனாலது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவியை ஏற்றாமல் சென்ற அரசு பஸ் ஓட்டுனர் முனிராஜிடம் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவரை சஸ்பெண்ட் செய்தார்.
இந்த நிலையில், அதேபோன்று மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. கோவையில் இருந்து பல்லடம் வழியாக போடி செல்லும் பேருந்து கே. கள்ளிப்பாளையம் நிற்காது என நடத்துனர் கூறி ஒரு பயணியை கீழே இறங்கச் சொல்லி இருக்கிறார். நடத்துனரின் இந்த செயலை கீழே இருந்த ஒருவர் வீடியோவாக பதிவேற்றம் செய்தார்.
இதனைப் பார்த்த நடத்துனர் உடனே பதறிப் போய் வேகமாக ஓடி வந்து சாரி சார்.. தெரியாம சொல்லிட்டேன்.. எனக்கூறி அந்தப் பயணியை மீண்டும் பேருந்தில் ஏற சொல்லி வற்புறுத்தி உள்ளார்.. நடத்துனரின் இந்த செயல் சோசியல் மீடியாவில் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!
தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!
பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்
மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!
தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!
உழவர்களுக்கு இந்த தீபாவளி இருளாகத்தான் இருந்தது.. கொல்லாமல் கொல்லுகிறது திமுக அரசு:அன்புமணி
சித்திரையும் வெயிலும்!
{{comments.comment}}