கோவை டூ போடி.. பேருந்திலிருந்து இறக்கப்பட்ட பயணி.. வீடியோ எடுத்ததால்.. பதறிய நடத்துனர்..!

Mar 26, 2025,08:32 PM IST

கோவை: கோவை பல்லடம் வழியே சென்ற பேருந்து ஒன்றில் பயணி ஒருவரை இறங்க சொன்ன நடத்துனரை, கீழே  இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். உடனே பதறிய நடத்துனர் வேகமாக ஓடிவந்து சாரி சார்.. தெரியாம சொல்லிட்டேன்.. எனக் கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


நேற்று தான் திருப்பூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில், பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர்  குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் பிளஸ் டூ மாணவி ஒருவர் பேருந்தில் ஏறுவதற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒன் சி என்ற அரசு பேருந்து ஸ்டாப்பில் நிற்காமல் வேகமாக சென்றது.


உடனே பிளஸ் டூ மாணவி தேர்வு எழுத எழுதாமல் போய்விடுமோ என்ற பயத்தில்  வேகமாக பேருந்தை துரத்தி ஓடியுள்ளார். மாணவி ஓடியதை பார்த்த சிலர் அதனை வீடியோவாக பதிவு செய்தனர். இது சோசியல் மீடியாவில் வைரனாலது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவியை ஏற்றாமல் சென்ற அரசு பஸ் ஓட்டுனர் முனிராஜிடம் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவரை  சஸ்பெண்ட் செய்தார்.




இந்த நிலையில், அதேபோன்று மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. கோவையில் இருந்து பல்லடம் வழியாக போடி செல்லும் பேருந்து கே. கள்ளிப்பாளையம் நிற்காது என நடத்துனர் கூறி ஒரு பயணியை கீழே இறங்கச் சொல்லி இருக்கிறார். நடத்துனரின் இந்த செயலை கீழே இருந்த ஒருவர் வீடியோவாக பதிவேற்றம் செய்தார்.


இதனைப் பார்த்த நடத்துனர் உடனே பதறிப் போய் வேகமாக  ஓடி வந்து சாரி சார்.. தெரியாம சொல்லிட்டேன்.. எனக்கூறி அந்தப் பயணியை மீண்டும் பேருந்தில் ஏற சொல்லி வற்புறுத்தி உள்ளார்.. நடத்துனரின் இந்த செயல் சோசியல் மீடியாவில் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

news

கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

news

வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!

news

தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!

news

SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி

news

ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

news

காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்