தோல்வி ஒரு வேதம்!

Nov 15, 2025,04:08 PM IST

- கவிதா உடையப்பன், சேலம்


முடியாது என்று மடிந்து விடுவதே தோல்வி 

முடியும் வரை முயற்சி செய்வதே வேள்வி 

தோல்வி எழுப்பும் பற்பல கேள்வி 

தோன்றாத சிந்தனையும் தோன்றுமே மறுவி


விளைவும் விருதும் அசைக்குமே மன உறுதியை 

லட்சியமும் லாவகமும் நிலை நிறுத்துமே கார்ய சித்தியை  

ஒவ்வொரு பொழுதிலும்  உள்ளது அழகிய புதுமை  

ஒவ்வொரு நிகழ்விலும் கனியும் பல இனிமை 


சோதனையில் பிறக்குமோர் சாதனை 

வேதனையிலும் கிடைக்குமோர் போதனை 

கற்பனையில் தோன்றுமோர் யோசனை 

பனை ஓலையிலும் உள்ளதோர் வாசனை 




வலிகள் தருமே பெரும் வலிமை 

விடாமுயற்சியே நம் அடிப்படை உடமை 

துவண்டு போவதோ வீண் மடமை 

தொடர்ந்து செயல்படுவதே சேர்க்கும் பெருமை 


தோல்வியினால் வரும் துக்கம் 

அதனை உருக்கிடுமே உயர் நோக்கம்

வெற்றி தோல்வியே வாழ்வின் சுவாரஸ்யம் 

அதனை பகிர்வதினால் ஆகுமோர் நற்காவியம்  


உளிகள் இல்லாமல் சிற்பமும் ஏது 

உலகில் இருக்கும் வரை ஊக்கமுடன் வாழு 

உற்சாகம் இல்லாமல் பிறப்பும் ஏது 

உள்ளுறுதியை இழக்காமல் உயர நீ ஏறு 


(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் கவிதா உடையப்பன் ரத்தினா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Pralay Missile: ஏவுகணைகளின் பிறப்பிடம் ஆகிறதா இந்தியா?.. பிரமிக்க வைக்கும் பிரளய்!

news

பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்

news

100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!

news

டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!

news

தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?

news

கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு

news

எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி

news

முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்

news

திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்