- கவிதா உடையப்பன், சேலம்
முடியாது என்று மடிந்து விடுவதே தோல்வி
முடியும் வரை முயற்சி செய்வதே வேள்வி
தோல்வி எழுப்பும் பற்பல கேள்வி
தோன்றாத சிந்தனையும் தோன்றுமே மறுவி
விளைவும் விருதும் அசைக்குமே மன உறுதியை
லட்சியமும் லாவகமும் நிலை நிறுத்துமே கார்ய சித்தியை
ஒவ்வொரு பொழுதிலும் உள்ளது அழகிய புதுமை
ஒவ்வொரு நிகழ்விலும் கனியும் பல இனிமை
சோதனையில் பிறக்குமோர் சாதனை
வேதனையிலும் கிடைக்குமோர் போதனை
கற்பனையில் தோன்றுமோர் யோசனை
பனை ஓலையிலும் உள்ளதோர் வாசனை

வலிகள் தருமே பெரும் வலிமை
விடாமுயற்சியே நம் அடிப்படை உடமை
துவண்டு போவதோ வீண் மடமை
தொடர்ந்து செயல்படுவதே சேர்க்கும் பெருமை
தோல்வியினால் வரும் துக்கம்
அதனை உருக்கிடுமே உயர் நோக்கம்
வெற்றி தோல்வியே வாழ்வின் சுவாரஸ்யம்
அதனை பகிர்வதினால் ஆகுமோர் நற்காவியம்
உளிகள் இல்லாமல் சிற்பமும் ஏது
உலகில் இருக்கும் வரை ஊக்கமுடன் வாழு
உற்சாகம் இல்லாமல் பிறப்பும் ஏது
உள்ளுறுதியை இழக்காமல் உயர நீ ஏறு
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் கவிதா உடையப்பன் ரத்தினா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!
நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!
புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்
10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?
எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
{{comments.comment}}