- கவிதா உடையப்பன், சேலம்
முடியாது என்று மடிந்து விடுவதே தோல்வி
முடியும் வரை முயற்சி செய்வதே வேள்வி
தோல்வி எழுப்பும் பற்பல கேள்வி
தோன்றாத சிந்தனையும் தோன்றுமே மறுவி
விளைவும் விருதும் அசைக்குமே மன உறுதியை
லட்சியமும் லாவகமும் நிலை நிறுத்துமே கார்ய சித்தியை
ஒவ்வொரு பொழுதிலும் உள்ளது அழகிய புதுமை
ஒவ்வொரு நிகழ்விலும் கனியும் பல இனிமை
சோதனையில் பிறக்குமோர் சாதனை
வேதனையிலும் கிடைக்குமோர் போதனை
கற்பனையில் தோன்றுமோர் யோசனை
பனை ஓலையிலும் உள்ளதோர் வாசனை

வலிகள் தருமே பெரும் வலிமை
விடாமுயற்சியே நம் அடிப்படை உடமை
துவண்டு போவதோ வீண் மடமை
தொடர்ந்து செயல்படுவதே சேர்க்கும் பெருமை
தோல்வியினால் வரும் துக்கம்
அதனை உருக்கிடுமே உயர் நோக்கம்
வெற்றி தோல்வியே வாழ்வின் சுவாரஸ்யம்
அதனை பகிர்வதினால் ஆகுமோர் நற்காவியம்
உளிகள் இல்லாமல் சிற்பமும் ஏது
உலகில் இருக்கும் வரை ஊக்கமுடன் வாழு
உற்சாகம் இல்லாமல் பிறப்பும் ஏது
உள்ளுறுதியை இழக்காமல் உயர நீ ஏறு
(சேலத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் கவிதா உடையப்பன் ரத்தினா செந்தில்குமார் தலைமையிலான திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவர். தன்னம்பிக்கை பேச்சாளரும் கூட)
Tamil Poem: புதிய விடியல்
Tamil Poem: மறைந்த காதல்
திருக்குறிப்புத் தொண்டர் நாயனார்!
TET ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட் அதிரடி!
ஆரோக்கியா பால் மற்றும் தயிர் விலை திடீர் உயர்வு - நாளை முதல் அமல்!
அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் விஜய் உத்தரவு
அன்பே அழகே அற்புதமே ஆரமுதே!
"வீட்டிலிருந்தபடியே ஓபி சீட்": அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு
கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை...அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!
{{comments.comment}}