காந்தி வழியில்.. ஏற்றத்தாழ்வு மறந்து.. ஒற்றுமை உணர்வுடன்.. வாழ்ந்திடுவோம்!

Oct 02, 2023,11:25 AM IST

அகிம்சை வழியில் அறப்போர் புரிந்து

வெற்றி கண்ட தியாகத்தின் திருவுருவே!

விடுதலையை ஈன்று

இந்திய மண்ணைக் காத்த மண்ணுலக மாமேதையாம்

மகாத்மா காந்தியே!

நீங்கள்

குழப்பமும் மயக்கமும்

கொண்ட

இளமைப்பருவம்

தாண்ட

சிராவணன் கதையைக் கேட்டு




பெற்றோர் பக்தி கொண்டு

அரிச்சந்திரன் நாடகம்

பார்த்து

உண்மையெனும்

விரதம் பூண்டு

சத்திய சோதனை தாண்டி

சுயமதை காத்து நின்று

வாழ்க்கைப் பாதை தன்னில்

வழுக்கிய புள்ளியைக் கூட

வெளிச்சம் போட்டு காட்டி

கொள்கை வீரம் நாட்டி

சரித்திரப் பாடத்தோடு

சத்திய பாடம் தந்தீர்!

உங்கள் பிறந்த நாளில்

அகிம்சை போற்றி

சைவம் உண்டு

மதுவை விலக்கி

மௌன விரதம் பூண்டு

அந்நிய மோகம் தவிர்த்து

கதராடை உடுத்தி

சாதிமதம் துறந்து

ஏற்றத்தாழ்வு மறந்து

உண்மை பேசி

ஒற்றுமை உணர்வுடன்

பயம்தனை ஒழித்து

நட்புடன் கூடிய

நிரந்தர வெற்றியில் திளைத்திட 

உறுதி பூணுவோம்!


கவிதை: 


வி. ராஜேஸ்வரி

உதவியாளர், காலேஜ் அலுவலகம்

மதுரைக் கல்லூரி, மதுரை.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்