காந்தி வழியில்.. ஏற்றத்தாழ்வு மறந்து.. ஒற்றுமை உணர்வுடன்.. வாழ்ந்திடுவோம்!

Oct 02, 2023,11:25 AM IST

அகிம்சை வழியில் அறப்போர் புரிந்து

வெற்றி கண்ட தியாகத்தின் திருவுருவே!

விடுதலையை ஈன்று

இந்திய மண்ணைக் காத்த மண்ணுலக மாமேதையாம்

மகாத்மா காந்தியே!

நீங்கள்

குழப்பமும் மயக்கமும்

கொண்ட

இளமைப்பருவம்

தாண்ட

சிராவணன் கதையைக் கேட்டு




பெற்றோர் பக்தி கொண்டு

அரிச்சந்திரன் நாடகம்

பார்த்து

உண்மையெனும்

விரதம் பூண்டு

சத்திய சோதனை தாண்டி

சுயமதை காத்து நின்று

வாழ்க்கைப் பாதை தன்னில்

வழுக்கிய புள்ளியைக் கூட

வெளிச்சம் போட்டு காட்டி

கொள்கை வீரம் நாட்டி

சரித்திரப் பாடத்தோடு

சத்திய பாடம் தந்தீர்!

உங்கள் பிறந்த நாளில்

அகிம்சை போற்றி

சைவம் உண்டு

மதுவை விலக்கி

மௌன விரதம் பூண்டு

அந்நிய மோகம் தவிர்த்து

கதராடை உடுத்தி

சாதிமதம் துறந்து

ஏற்றத்தாழ்வு மறந்து

உண்மை பேசி

ஒற்றுமை உணர்வுடன்

பயம்தனை ஒழித்து

நட்புடன் கூடிய

நிரந்தர வெற்றியில் திளைத்திட 

உறுதி பூணுவோம்!


கவிதை: 


வி. ராஜேஸ்வரி

உதவியாளர், காலேஜ் அலுவலகம்

மதுரைக் கல்லூரி, மதுரை.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்