அகிம்சை வழியில் அறப்போர் புரிந்து
வெற்றி கண்ட தியாகத்தின் திருவுருவே!
விடுதலையை ஈன்று
இந்திய மண்ணைக் காத்த மண்ணுலக மாமேதையாம்
மகாத்மா காந்தியே!
நீங்கள்
குழப்பமும் மயக்கமும்
கொண்ட
இளமைப்பருவம்
தாண்ட
சிராவணன் கதையைக் கேட்டு
பெற்றோர் பக்தி கொண்டு
அரிச்சந்திரன் நாடகம்
பார்த்து
உண்மையெனும்
விரதம் பூண்டு
சத்திய சோதனை தாண்டி
சுயமதை காத்து நின்று
வாழ்க்கைப் பாதை தன்னில்
வழுக்கிய புள்ளியைக் கூட
வெளிச்சம் போட்டு காட்டி
கொள்கை வீரம் நாட்டி
சரித்திரப் பாடத்தோடு
சத்திய பாடம் தந்தீர்!
உங்கள் பிறந்த நாளில்
அகிம்சை போற்றி
சைவம் உண்டு
மதுவை விலக்கி
மௌன விரதம் பூண்டு
அந்நிய மோகம் தவிர்த்து
கதராடை உடுத்தி
சாதிமதம் துறந்து
ஏற்றத்தாழ்வு மறந்து
உண்மை பேசி
ஒற்றுமை உணர்வுடன்
பயம்தனை ஒழித்து
நட்புடன் கூடிய
நிரந்தர வெற்றியில் திளைத்திட
உறுதி பூணுவோம்!
கவிதை:
வி. ராஜேஸ்வரி
உதவியாளர், காலேஜ் அலுவலகம்
மதுரைக் கல்லூரி, மதுரை.
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
{{comments.comment}}