- கவிஞர் பொ. கிருபாவதி, சென்னை
தமிழாக நான் மாற வேண்டும்!
தமிழே உன் அருளாலே
நான் வாழ வேண்டும்!
தினமிங்கு உனைப்பாட வேண்டும்!
தேன் தமிழ் பாடியே உயிர் வாழ வேணடும்!

கற்பனை வானத்தில் பறந்து..
கவிதைகள் பொழுதெல்லாம் புனைந்து..
உன் பொற்பாதம் அருகிலே இருந்து..
யான் பாகுபோல் உருகியே பாடிவர வேண்டும்!
முன்னோடி கவிஞர்கள் கைப் பிடித்தழைக்க..
அந்த முண்டாசு பாரதியின் மடியில் நான் கிடக்க..
பாவேந்தர் என்னோடு வாவென்று அழைக்க..
கவியரசர் கவிதையில் கரைந்துயான் மிதக்க.!
ஒவ்வொரு சொல்லாகத் தந்து..
நீ.. ஊட்டிவிட ஊட்டிவிட பாடல் யான் இசைக்க..
எவ்வாறு பார்த்தாலும் அம்மா..
தமிழோடும் தமிழின் சுவையோடும் நான் வாழ வேண்டும்
தமிழ் அன்னையே அருள் புரிவாய்!
கோவை கொடூரம்.. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.. முதல்வர் விஜய்
அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!
South West Monsoon: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: சென்னையில் சட்டென மாறிய வானிலை
Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!
கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்
தவெக அரசில் சேர முடியாமல் போச்சே.. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் வருந்தும் கட்சிகள்?
மே 23 ஆமைகள் தினம்.. மாணவர்களுக்கான நீதி கதை.. "கடைசியாக வந்த கோமதி"
Kalaimani: சிந்தனை.. எப்போது வெற்றி கிட்டும்!
Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!
{{comments.comment}}