- கவிஞர் பொ. கிருபாவதி, சென்னை
தமிழாக நான் மாற வேண்டும்!
தமிழே உன் அருளாலே
நான் வாழ வேண்டும்!
தினமிங்கு உனைப்பாட வேண்டும்!
தேன் தமிழ் பாடியே உயிர் வாழ வேணடும்!
கற்பனை வானத்தில் பறந்து..
கவிதைகள் பொழுதெல்லாம் புனைந்து..
உன் பொற்பாதம் அருகிலே இருந்து..
யான் பாகுபோல் உருகியே பாடிவர வேண்டும்!
முன்னோடி கவிஞர்கள் கைப் பிடித்தழைக்க..
அந்த முண்டாசு பாரதியின் மடியில் நான் கிடக்க..
பாவேந்தர் என்னோடு வாவென்று அழைக்க..
கவியரசர் கவிதையில் கரைந்துயான் மிதக்க.!
ஒவ்வொரு சொல்லாகத் தந்து..
நீ.. ஊட்டிவிட ஊட்டிவிட பாடல் யான் இசைக்க..
எவ்வாறு பார்த்தாலும் அம்மா..
தமிழோடும் தமிழின் சுவையோடும் நான் வாழ வேண்டும்
தமிழ் அன்னையே அருள் புரிவாய்!
4 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு இருக்காம்... எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கதையளக்கும் மனநோயாளியாக மாறி வருகிறார் சீமான்.. திமுக கண்டனம்
யோவ் என்று விளித்து.. தவெக தலைவர் விஜய்க்குப் பதிலடி கொடுத்த திமுக ராஜீவ் காந்தி!
வாக்குறுதி எண் 456.. கொடுத்தது யாரு.. திமுகவிடம் எச்சரிக்கையாக இருங்கள்.. விஜய் பேச்சு
அம்மா அம்மான்னு சொல்லிட்டு.. அதிமுகவை அதன் கோட்டையில் வைத்து கடுமையாக விமர்சித்த விஜய்!
கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
அண்ணா, எம்ஜிஆர் குறித்து இனியும் அநாகரீகமாக பேசினால்.. சீமானுக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை
இது ஒரு சனியன்.. அது ஒரு சனியன்.. அண்ணா, எம்ஜிஆர் குறித்த சீமான் பேச்சால் சலசலப்பு!
தமிழன்னையே!
{{comments.comment}}