- கவிஞர் பொ. கிருபாவதி, சென்னை
தமிழாக நான் மாற வேண்டும்!
தமிழே உன் அருளாலே
நான் வாழ வேண்டும்!
தினமிங்கு உனைப்பாட வேண்டும்!
தேன் தமிழ் பாடியே உயிர் வாழ வேணடும்!

கற்பனை வானத்தில் பறந்து..
கவிதைகள் பொழுதெல்லாம் புனைந்து..
உன் பொற்பாதம் அருகிலே இருந்து..
யான் பாகுபோல் உருகியே பாடிவர வேண்டும்!
முன்னோடி கவிஞர்கள் கைப் பிடித்தழைக்க..
அந்த முண்டாசு பாரதியின் மடியில் நான் கிடக்க..
பாவேந்தர் என்னோடு வாவென்று அழைக்க..
கவியரசர் கவிதையில் கரைந்துயான் மிதக்க.!
ஒவ்வொரு சொல்லாகத் தந்து..
நீ.. ஊட்டிவிட ஊட்டிவிட பாடல் யான் இசைக்க..
எவ்வாறு பார்த்தாலும் அம்மா..
தமிழோடும் தமிழின் சுவையோடும் நான் வாழ வேண்டும்
தமிழ் அன்னையே அருள் புரிவாய்!
70 வயதிற்கு மேற்பட்ட நிர்வாகிகளுக்கு பதவி கிடையாது: திமுக தலைமை அதிரடி
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
Egypt Tour Diary: பேசும் சிலை!
தினம் தினம் கொண்டாட்டமா?
கொசுவின் அங்கலாய்ப்பு!
மறைந்தாலும் நன்று...!
உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!
வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
{{comments.comment}}