தமிழன்னையே!

Sep 27, 2025,04:00 PM IST

- கவிஞர் பொ. கிருபாவதி, சென்னை


தமிழாக நான் மாற வேண்டும்! 

தமிழே உன் அருளாலே 

நான் வாழ வேண்டும்!  

தினமிங்கு உனைப்பாட வேண்டும்! 

தேன் தமிழ் பாடியே உயிர் வாழ வேணடும்!




கற்பனை வானத்தில் பறந்து.. 

கவிதைகள் பொழுதெல்லாம் புனைந்து.. 

உன் பொற்பாதம் அருகிலே இருந்து.. 

யான் பாகுபோல் உருகியே பாடிவர வேண்டும்!


முன்னோடி கவிஞர்கள் கைப் பிடித்தழைக்க.. 

அந்த முண்டாசு பாரதியின் மடியில் நான் கிடக்க.. 

பாவேந்தர் என்னோடு வாவென்று  அழைக்க.. 

கவியரசர் கவிதையில்  கரைந்துயான் மிதக்க.!


ஒவ்வொரு சொல்லாகத் தந்து.. 

நீ.. ஊட்டிவிட ஊட்டிவிட பாடல் யான் இசைக்க.. 

எவ்வாறு பார்த்தாலும் அம்மா.. 

தமிழோடும் தமிழின் சுவையோடும் நான் வாழ வேண்டும்

தமிழ் அன்னையே அருள் புரிவாய்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. டாக்கா கோர்ட் அதிரடி

news

மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்!

news

மோமோ விற்பனையில் தினசரி 1 லட்சம் சம்பாதிக்கிறார்களா பெங்களூரு இளைஞர்கள்??

news

நிலவிலிருந்து சாம்பிள் எடுக்கத் திட்டம்.. சந்திரயான் 4 குறித்து இஸ்ரோ தலைவர் முக்கிய தகவல்!

news

என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.. தேஜஸ்வி யாதவ் மீது லாலு பிரசாத் மகள் புகார்

news

பீகாரில் புதிய ஆட்சியமைக்கும் பணிகள் விறுவிறுப்பு.. வெற்றி விழாவுக்கு பிரதமர் மோடி வருகிறார்

news

சவுதி அரேபியாவில் கோர விபத்து...42 இந்தியர்கள் பலியான துயரம்

news

வேலின் விழி திறப்பது திருத்தணியில்!

news

Gold price:தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை... இன்றை முழு விபரம் இதோ!

அதிகம் பார்க்கும் செய்திகள்