- கவிஞர் பொ. கிருபாவதி, சென்னை
தமிழாக நான் மாற வேண்டும்!
தமிழே உன் அருளாலே
நான் வாழ வேண்டும்!
தினமிங்கு உனைப்பாட வேண்டும்!
தேன் தமிழ் பாடியே உயிர் வாழ வேணடும்!

கற்பனை வானத்தில் பறந்து..
கவிதைகள் பொழுதெல்லாம் புனைந்து..
உன் பொற்பாதம் அருகிலே இருந்து..
யான் பாகுபோல் உருகியே பாடிவர வேண்டும்!
முன்னோடி கவிஞர்கள் கைப் பிடித்தழைக்க..
அந்த முண்டாசு பாரதியின் மடியில் நான் கிடக்க..
பாவேந்தர் என்னோடு வாவென்று அழைக்க..
கவியரசர் கவிதையில் கரைந்துயான் மிதக்க.!
ஒவ்வொரு சொல்லாகத் தந்து..
நீ.. ஊட்டிவிட ஊட்டிவிட பாடல் யான் இசைக்க..
எவ்வாறு பார்த்தாலும் அம்மா..
தமிழோடும் தமிழின் சுவையோடும் நான் வாழ வேண்டும்
தமிழ் அன்னையே அருள் புரிவாய்!
திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு.. தவறி வந்த ஒரு வார்த்தை.. வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்!
என்னைப் பற்றி அருவருப்பாக கீழ்த்தரமாக பேசுவதை நிறுத்துங்கள் - நடிகை திரிஷா
சொந்த நாட்டில் அகதிகளாகும் மீனவர்கள்.. இலங்கையின் அராஜகத்தை அடக்கப்போவது யார்?: தவெக தலைவர் விஜய்
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி
தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அதிரடி: தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு!
மரத்திலேயே விளையும் விட்டமின் மாத்திரை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 5)
பிப்ரவரி 21ம் தேதி 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு
மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?
{{comments.comment}}