தமிழன்னையே!

Sep 27, 2025,04:00 PM IST

- கவிஞர் பொ. கிருபாவதி, சென்னை


தமிழாக நான் மாற வேண்டும்! 

தமிழே உன் அருளாலே 

நான் வாழ வேண்டும்!  

தினமிங்கு உனைப்பாட வேண்டும்! 

தேன் தமிழ் பாடியே உயிர் வாழ வேணடும்!




கற்பனை வானத்தில் பறந்து.. 

கவிதைகள் பொழுதெல்லாம் புனைந்து.. 

உன் பொற்பாதம் அருகிலே இருந்து.. 

யான் பாகுபோல் உருகியே பாடிவர வேண்டும்!


முன்னோடி கவிஞர்கள் கைப் பிடித்தழைக்க.. 

அந்த முண்டாசு பாரதியின் மடியில் நான் கிடக்க.. 

பாவேந்தர் என்னோடு வாவென்று  அழைக்க.. 

கவியரசர் கவிதையில்  கரைந்துயான் மிதக்க.!


ஒவ்வொரு சொல்லாகத் தந்து.. 

நீ.. ஊட்டிவிட ஊட்டிவிட பாடல் யான் இசைக்க.. 

எவ்வாறு பார்த்தாலும் அம்மா.. 

தமிழோடும் தமிழின் சுவையோடும் நான் வாழ வேண்டும்

தமிழ் அன்னையே அருள் புரிவாய்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சேப்பாக்கம் இனியும் சிஎஸ்கே கோட்டை இல்லை.. அபார வெற்றியைத் தட்டிய பஞ்சாப் கிங்ஸ்!

news

Sarfaraz Khan: சர்பராஸ் கான் அதிரடி கேமியோ.. ஜஸ்ட் 12 பந்துகளில் பட்டையைக் கிளப்பிய 32 ரன்கள்!

news

Ayush Mhatre.. ஐபிஎல் வரலாற்றிலேயே.. 19 வயசுக்கு முன்னாடியே.. புதிய வரலாறு படைத்த ஆயுஷ் மாத்ரே!

news

Ayush Mhatre: கட்டையைப் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸை.. தூக்கி செங்குத்தாக நிறுத்திய ஆயுஷ் மாத்ரே!

news

பாஜக வேட்பாளர்கள்: மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி.. அண்ணாமலை போட்டியிடவில்லை!

news

ஸ்ரீபெரும்புதூரில் செல்வப் பெருந்தகை.. பென்னாகரத்தில் தமிழ்க்குமரன்.. காங். வேட்பாளர் பட்டியல்

news

மனிதனை தாண்டும் நுண்ணறிவு.. Super Intelligence மற்றும் மனிதன்–AI இணைவு (9)

news

இது என் கதை.. உங்களது அனுபவத்தையும் பகிருங்கள் தோழியரே!

news

அது யாருக்கு சொந்தம்..? (ஒரு பக்க சிறுகதை)

அதிகம் பார்க்கும் செய்திகள்