1000 முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் போராட்டம்.. திருமாவளவன் அறிவிப்பு

Dec 23, 2024,07:05 PM IST

சென்னை: அம்பேத்கர் என்ன கடவுளா? என்று கருத்து தெரிவித்த அமித்ஷாவை கண்டித்து விசிக சார்பில் டிச., 28ம் தேதி 1000 முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் போராட்டம்  நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து திருச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எல்லா பத்திரிக்கையாளர்களையும் அழைத்து நான் அந்த பொருளில் சொல்ல வில்லை. காங்கிரஸ் தான் திருத்தி பேசுகிறது என்று அவர் விளக்கம் அளித்து இருக்கிறார். ஆனால், உண்மையில் அவர் காங்கிரசை விமர்சித்தார் என்றாலும் கூட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை கடவுளோடு ஒப்பிட்டுப் பேசியது அவருக்குள்ள ஒரு வெறுப்பு அல்லது அம்பேத்கர் மீதான குறைவான மதிப்பீட்டை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தியா முழுவதும் அதற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிற சூழலில் பிரதமர் மோடி உட்பட அமைச்சர்கள் அமித்ஷா பேசியது தவறு இல்லை என்று நியாயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். எக்ஸ் தளத்தில் அவற்றை நீக்க வேண்டும் என்று அரசின் சார்பிலேயே வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்து இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.




அம்பேத்கர் அவர்களை காங்கிரஸ் கட்சி தோற்கடித்தது என்று திரும்ப திரும்ப பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்தவர்களும் சொல்லுகிறார்கள். ஆனால், உண்மையில் அம்பேத்கர் அவர்களே பேசிய குறிப்புக்கள் இருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் தான் உண்மையில் திரித்து பொய்யை பரப்புகிறார்கள். தேர்தல் நேரத்தில் யாராக இருந்தாலும் அவர்களை நாம் தோற்கடிக்க வேண்டும் என்று தான் நினைப்போம். அவர்கள் வெற்றி பெறட்டும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள்.


ஆனால், இவர்கள் கருத்தியல் ரீதியாக முரண்படுகின்றனர். அம்பேத்கருடைய சிந்தனைகளை மறுத்து அவரை இந்துத்துவா அம்பேத்கர் என்று அடையாளப்படுத்தி அவரை விழுங்கி செரிக்க பார்க்கின்றனர். இதை ஏற்க முடியாது என்பது தான் இன்றைக்கு அம்பேத்கருடைய இயக்கங்களை சார்ந்த தலைவர்களும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். வருகிற 28ம் தேதி இந்தியா முழுவதிலும் இதனைக்கண்டித்து, நுற்றுக்கணக்கான அம்பேத்கர் இயக்கங்கள் ஒரே நேரத்தில் மாநில வாரியாக ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம் . விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரும் 28ஆம் தேதி தலைநகர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரித்து போராட்டமாக அந்தப் போராட்டம் அமையும். அம்பேத்கர் விளிம்பு நிலை மக்களுக்கான மீட்பர். அவர் என்ன கடவுளா என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆத்திரத்தை வெளிப்படுத்திய அமித் ஷா அவர்களின் போக்கு கண்டனத்திற்குரியது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

news

பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?

news

திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி

news

பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

news

தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்

news

சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்

news

பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!

news

தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி

அதிகம் பார்க்கும் செய்திகள்