சென்னை: அம்பேத்கர் என்ன கடவுளா? என்று கருத்து தெரிவித்த அமித்ஷாவை கண்டித்து விசிக சார்பில் டிச., 28ம் தேதி 1000 முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் போராட்டம் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எல்லா பத்திரிக்கையாளர்களையும் அழைத்து நான் அந்த பொருளில் சொல்ல வில்லை. காங்கிரஸ் தான் திருத்தி பேசுகிறது என்று அவர் விளக்கம் அளித்து இருக்கிறார். ஆனால், உண்மையில் அவர் காங்கிரசை விமர்சித்தார் என்றாலும் கூட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை கடவுளோடு ஒப்பிட்டுப் பேசியது அவருக்குள்ள ஒரு வெறுப்பு அல்லது அம்பேத்கர் மீதான குறைவான மதிப்பீட்டை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தியா முழுவதும் அதற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிற சூழலில் பிரதமர் மோடி உட்பட அமைச்சர்கள் அமித்ஷா பேசியது தவறு இல்லை என்று நியாயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். எக்ஸ் தளத்தில் அவற்றை நீக்க வேண்டும் என்று அரசின் சார்பிலேயே வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்து இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அம்பேத்கர் அவர்களை காங்கிரஸ் கட்சி தோற்கடித்தது என்று திரும்ப திரும்ப பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்தவர்களும் சொல்லுகிறார்கள். ஆனால், உண்மையில் அம்பேத்கர் அவர்களே பேசிய குறிப்புக்கள் இருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் தான் உண்மையில் திரித்து பொய்யை பரப்புகிறார்கள். தேர்தல் நேரத்தில் யாராக இருந்தாலும் அவர்களை நாம் தோற்கடிக்க வேண்டும் என்று தான் நினைப்போம். அவர்கள் வெற்றி பெறட்டும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள்.
ஆனால், இவர்கள் கருத்தியல் ரீதியாக முரண்படுகின்றனர். அம்பேத்கருடைய சிந்தனைகளை மறுத்து அவரை இந்துத்துவா அம்பேத்கர் என்று அடையாளப்படுத்தி அவரை விழுங்கி செரிக்க பார்க்கின்றனர். இதை ஏற்க முடியாது என்பது தான் இன்றைக்கு அம்பேத்கருடைய இயக்கங்களை சார்ந்த தலைவர்களும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். வருகிற 28ம் தேதி இந்தியா முழுவதிலும் இதனைக்கண்டித்து, நுற்றுக்கணக்கான அம்பேத்கர் இயக்கங்கள் ஒரே நேரத்தில் மாநில வாரியாக ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம் . விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரும் 28ஆம் தேதி தலைநகர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரித்து போராட்டமாக அந்தப் போராட்டம் அமையும். அம்பேத்கர் விளிம்பு நிலை மக்களுக்கான மீட்பர். அவர் என்ன கடவுளா என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆத்திரத்தை வெளிப்படுத்திய அமித் ஷா அவர்களின் போக்கு கண்டனத்திற்குரியது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமைச்சர் நேரு மீது வழக்கு.. திமுகவுக்கு வைக்கப்படும் மறைமுக 'செக்'ஆ.. நாங்க தயார்.. திமுக அதிரடி!
திமுக.,வில் இணையப் போகிறாரா ஓபிஎஸ்? .. சட்டசபையை அதிர வைத்த ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்!
மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவிற்கு இருக்கிறது - முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
அந்த ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட் யாருக்கு?...உச்சகட்ட பரபரப்பில் அதிமுக, திமுக கூட்டணிகள்
பாமக ராமதாஸ் கையெழுத்தே பொய்யா? பகீர் கிளப்பிய வக்கீல்... என்னதான் நடக்கிறது?
தேமுதிக பிளான்: விஜய பிரபாகரன் தெற்கு.. பிரேமலதா விஜயகாந்த் வடக்கு.. எல்.கே.சுதீஷ் ராஜ்யசபா!
த.வெ.க நிர்வாகிகள் கூட்டம்... பொதுமக்களுக்கு அனுமதியில்லை... காவல்துறை அறிவிப்பு!
இந்தியா பாகிஸ்தான் மோதலும்.. வரிவிதிப்பை "டிரம்ப் கார்டாக" பயன்படுத்தினாரா அமெரிக்க அதிபர்?
எனக்கு வாசனையும் தெரியாது, சுவையும் தெரியாது : மம்முட்டி ஓபன் டாக்!
{{comments.comment}}