சிந்தனைச் சிதறல்.. நாளைய நிலையை உணராமல் கொடுக்கும் அனைத்தும் நம்மையே கெடுக்கும்!

May 09, 2026,05:09 PM IST

- அ. தாமஸ்


நாம் கொடுக்கும் வாக்கு நம் தகுதியைத் தரணிப்படுத்தும் நாம் செலுத்தும் வாக்கோ நம்மை ஆளும் தகுதியுடைய தலைவனை தன் வயப்படுத்தும். 


வாக்கு கொடுக்குமுன் செயல்படுத்த முடியுமா என்றும் கொடுத்த பின் செயல்படுத்த வேண்டுமென்றும் யோசிப்பதே நம்மையே நமக்கு அடையாளப்படுத்தும்.


வாக்கு கொடுக்கும் முன் கொடுக்காத வாக்கு நம் வசம் கொடுத்தபின் அவ்வாக்குக்கே நாம் வசம் எனவே சிந்திப்போம் வாக்கை நம் வசமாக்க.


வாக்கு செலுத்துமுன் தகுதியான தலைவரை தேர்ந்திட யோசித்தால் தகுதியான தலைவரின் கீழ் இத்தரணியை யோசிக்காமலே நேசிக்கலாம்.


வாக்கு செலுத்தவும் பிறருக்கு வாக்கு கொடுக்கவும் முன்மதியோடு யோசித்தால் பின்னாளெல்லாம் நிம்மதியாய் சுவாசிக்கலாம்.


வாக்கு கேட்பவரிடத்தில் வாக்கு கொடுக்குமுன்னும், வாக்கு செலுத்து முன்னும் நம் தகுதியை நடுநிலை படுத்துவதே நன்மை பயக்கும். 




நமது நாளைய நிலையை உணராமலே கொடுக்கும் அனைத்தும்  நாளை நம்மையே இல்லாமல் கெடுக்கும். எனவே வாக்கே நம் வாழ்க்கை என்பதில் கருத்தேற்றி வாக்கினைக் கொடுப்போம் வாழ்க்கையைக் காப்போம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கிடைத்தது பெரும்பான்மை.. விஜய் ஆட்சி அமைக்க சிக்கல் நீங்கியது.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெகவிடம் நாங்கள் பதவிகளைக் கோரவில்லை.. விடுதலைச் சிறுத்தைகள் விளக்கம்

news

DMK: தோல்வி கண்டு தொய்வடைய மாட்டோம்.... அன்று கருணாநிதி சொன்னது!

news

மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய நிலையை உணராமல் கொடுக்கும் அனைத்தும் நம்மையே கெடுக்கும்!

news

தவெக ஆட்சி அமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவு?.. ஆனா ஒரு ட்விஸ்ட்!

news

தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்

news

நரை வந்தபோதும் கரைதொட்டு மோதுவதும்.. ஆதலால் காதல் செய்வீர்!

news

இரண்டெழுத்து மந்திரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்