சிந்தனைச் சிதறல்.. நாளைய நிலையை உணராமல் கொடுக்கும் அனைத்தும் நம்மையே கெடுக்கும்!

May 09, 2026,05:09 PM IST

- அ. தாமஸ்


நாம் கொடுக்கும் வாக்கு நம் தகுதியைத் தரணிப்படுத்தும் நாம் செலுத்தும் வாக்கோ நம்மை ஆளும் தகுதியுடைய தலைவனை தன் வயப்படுத்தும். 


வாக்கு கொடுக்குமுன் செயல்படுத்த முடியுமா என்றும் கொடுத்த பின் செயல்படுத்த வேண்டுமென்றும் யோசிப்பதே நம்மையே நமக்கு அடையாளப்படுத்தும்.


வாக்கு கொடுக்கும் முன் கொடுக்காத வாக்கு நம் வசம் கொடுத்தபின் அவ்வாக்குக்கே நாம் வசம் எனவே சிந்திப்போம் வாக்கை நம் வசமாக்க.


வாக்கு செலுத்துமுன் தகுதியான தலைவரை தேர்ந்திட யோசித்தால் தகுதியான தலைவரின் கீழ் இத்தரணியை யோசிக்காமலே நேசிக்கலாம்.


வாக்கு செலுத்தவும் பிறருக்கு வாக்கு கொடுக்கவும் முன்மதியோடு யோசித்தால் பின்னாளெல்லாம் நிம்மதியாய் சுவாசிக்கலாம்.


வாக்கு கேட்பவரிடத்தில் வாக்கு கொடுக்குமுன்னும், வாக்கு செலுத்து முன்னும் நம் தகுதியை நடுநிலை படுத்துவதே நன்மை பயக்கும். 




நமது நாளைய நிலையை உணராமலே கொடுக்கும் அனைத்தும்  நாளை நம்மையே இல்லாமல் கெடுக்கும். எனவே வாக்கே நம் வாழ்க்கை என்பதில் கருத்தேற்றி வாக்கினைக் கொடுப்போம் வாழ்க்கையைக் காப்போம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜக, திமுக, அதிமுக.. அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்த தலைவர்கள்.. தவெக அரசுக்கு நெருக்கடியா?

news

ஜூலை 20 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மத்திய அரசு அறிவிப்பு

news

Lookout Notice: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

news

குதிரை பேர விவகாரம் : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தம்பி அசோக் ஆஜராக சம்மன்

news

Lokbhavan announcement: மக்கள் இனி ஆளுநர் மாளிகையில் புகார் அளிக்கலாம் : ஆளுநர் மாளிகை தகவல்

news

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

news

ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

news

"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்