- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி
அலைகள் ஓய்வதில்லை...
ஓயாத அலைகளினால்...
முட்டம் கடற்கரையில் கடலோரக் கவிதைகள் பாடிக்கொண்டே ...
கிழக்கே போகும் ரயிலில்,
கொடி பறக்க... முதல் மரியாதையுடன்...
மண்வாசனை மாறாத
கிழக்குச் சீமையில் இருந்து....
16 வயதினிலே, புதுமைப்பெண் கருத்தம்மாவின்
புதிய வார்ப்பு;என் உயிர்த் தோழன்,

புது நெல்லு புது நாத்து கொண்டு நாடோடித்தென்றலுடன்..
வேதம் புதிதென காதல் ஓவியம் படைத்து..
தாவணிக்கனவுகள், சிகப்பு ரோஜாக்களை அள்ளி வீச...
கண்களால் கைது செய்யப்பட்ட ஒரு கைதியின் டைரி...
தாஜ்மஹால் தமிழ்ச்செல்வனின்.. நிழல்கள்.. இன்றல்ல, என்றும் மறையாது....
இதய அலை ஓய்ந்தாலும்....
பாரதிராஜா என்ற இயக்குநர் இமயத்தின் திரைப்படங்கள் என்னும் அலைகள் மனதில் டிக் டிக் டிக் என ஓயாமல் வந்து உறவாடிக் கொண்டே தான் இருக்கும்...
அலைகள் ஓய்வதில்லை....!
Miss you the great One and Only Bharathiraja!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}