- இரா. மும்தாஜ் பேகம்
ஏய் பாரதியே! ஏய் ராசாவே!
பதினாறு வயதினிலே மயிலை
பாலிவுட்டில் ஆட வைத்தாய்
பரட்டையையும் சப்பானியையும்
பார் போற்றும் ஸ்டார் ஆக்கினாய்
கடலோர கவிதையிலே காதலை காட்டினாய்
முதுமையிலும் காதல் வரும் என்பதை
முதல் மரியாதையில் காட்சியாக்கினாய்
கிழக்கே போகும் ரயிலில் ராதிகாவை ஏற்றிவிட்டாய்
கிழக்குச் சீமையிலே படத்தில்
பாசமலர் தோற்கும் பாசத்தைக் காட்டினாய்

பாசத்தை பங்கு போட பட்டாயில்லை
உறவுகளின் பாசத்தை உரசிக் காட்டினாய்
வேதம் புதிதில் இனவாதம் பேசினாய்
மண்வாசனையில் நம் மண்ணின் மகத்துவம் காட்டினாய்
அல்லி ஊரில் அவதரித்த கள்ளிக்காட்டு காவியம் நீ
பலப்பல ராசாக்களை உருவாக்கினாய்
ராசி என்றோ பெயர் சூட்டினாய்
ராதிகா, ரோஜா, ரேகா,ரேவதியென்று
முடி சூடா ராசாவே
நீ முகவரி தந்தாய் பலருக்கும்
அன்பின் ஆழமா...
அறிவூட்டும் வசனமா... கற்கண்டு காதலா...
கருத்தூறும் காவியமா...
சினிமாத்துறைக்கு சிகரம் நீ
"என் இனிய தமிழ் மக்களே" என்ற
கம்பீரக் குரலை காலமகள் கவர்ந்து சென்றாள்
உன்குரல் சிங்கத்தின் கர்ச்சனையாய்
என் செவியில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
(இரா.மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர், திருச்சி)
கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி போராட்டம் எதிரொலி.. பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்
என் மகன் சாதித்து விட்டார்.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித்தின் தாயார் பெருமிதம்
நான் யாருக்கு என்னை நிரூபிக்க வேண்டும்.. என்னைக் குறை கூறுவது நியாயமா.. சோனம் வாங்சுக்
இன்று முதல் நான் அரசியல் துறவறம் பூணுகிறேன்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.. நடிகை ஜோதிகா பரபரப்பு பதிவு
அனாதைகள் யாருடைய குழந்தைகள்???
நன்றொன்று உண்டென்று
சிறிதாய் இருந்தது பெரிதாகி விட்டது.. வீடு காலி!
பணத்தை வென்ற பாசம்!
{{comments.comment}}