- இரா. மும்தாஜ் பேகம்
ஏய் பாரதியே! ஏய் ராசாவே!
பதினாறு வயதினிலே மயிலை
பாலிவுட்டில் ஆட வைத்தாய்
பரட்டையையும் சப்பானியையும்
பார் போற்றும் ஸ்டார் ஆக்கினாய்
கடலோர கவிதையிலே காதலை காட்டினாய்
முதுமையிலும் காதல் வரும் என்பதை
முதல் மரியாதையில் காட்சியாக்கினாய்
கிழக்கே போகும் ரயிலில் ராதிகாவை ஏற்றிவிட்டாய்
கிழக்குச் சீமையிலே படத்தில்
பாசமலர் தோற்கும் பாசத்தைக் காட்டினாய்

பாசத்தை பங்கு போட பட்டாயில்லை
உறவுகளின் பாசத்தை உரசிக் காட்டினாய்
வேதம் புதிதில் இனவாதம் பேசினாய்
மண்வாசனையில் நம் மண்ணின் மகத்துவம் காட்டினாய்
அல்லி ஊரில் அவதரித்த கள்ளிக்காட்டு காவியம் நீ
பலப்பல ராசாக்களை உருவாக்கினாய்
ராசி என்றோ பெயர் சூட்டினாய்
ராதிகா, ரோஜா, ரேகா,ரேவதியென்று
முடி சூடா ராசாவே
நீ முகவரி தந்தாய் பலருக்கும்
அன்பின் ஆழமா...
அறிவூட்டும் வசனமா... கற்கண்டு காதலா...
கருத்தூறும் காவியமா...
சினிமாத்துறைக்கு சிகரம் நீ
"என் இனிய தமிழ் மக்களே" என்ற
கம்பீரக் குரலை காலமகள் கவர்ந்து சென்றாள்
உன்குரல் சிங்கத்தின் கர்ச்சனையாய்
என் செவியில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
(இரா.மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர், திருச்சி)
கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு:மீண்டும் விறுவிறுப்பான சி பி ஐ விசாரணை
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை
எம்ஜிஆர்., வழியில்...நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்
பாசத்திற்குரிய.. தமிழ்த்திரு பாரதிராஜாவுக்கு ஓர் புகழாரம்!
என்னது...முதல்வர் தொகுதியிலேயே குடிநீர் விநியோகம் ரத்தா?
சினிமாவின் சிகரம் சரிந்தது!
நமது துன்பத்திற்கு நாமே காரணமா?
திமுக கூட்டணியில் சி.பி.ஐ. நீடிக்கும் சூழல் இப்போது இல்லை.. மு.வீரபாண்டியன் அறிவிப்பு
ஹார்மோஸ் நீரிணை முற்றிலும் மூடல்: ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு
{{comments.comment}}