- கவிநிலவு சுமதி சிவக்குமார்
ஒரு வீட்டு திண்ணையில் மாலையில் கூடும் வீட்டு தலைவிகளின் அவசரக் கூட்டம்.. இதை கற்பனையாக வைத்து ஒரு ஜாலியான பாட்டு.. வாங்க ரசிக்கலாம்.
அலமேலு :
ராசாத்தி இங்கிட்டு வந்து ஒன் வூட்டு கத சொல்லு. ஆத்தி நாமும் கொஞ்சம் கேட்டு வப்போம்.
ராசாத்தி :
சட்டில கேப்பையத்தான் கரச்சு வச்சு அடுப்புல அதுவுந்தான் சலசலன்னு கொதிக்கயில

அலமேலு :
அப்பொறம் என்னாச்சு டி...!!
ராசாத்தி :
அகப்பையில கிண்டிவிட அங்க அகப்படலேக் கூழெல்லாம்
அலமேலு :
ஐயய்யோ. வேறென்ன பண்ணுண சோத்துக்கு...??
ராசாத்தி :
ஆத்தி...!! வந்தவுக வக்கனையாக் கேட்டாக...!! வவுறாரக் குடிக்கத்தான் வேகமாக் கொண்டு வாடி கூழ...!!
ராசாத்தி கணவர் :
சந்தமிங்கே பாடுதடி சட்டியில சத்தமென்ன கேட்குதடி...!!
அடுப்பிலே காலிப்பானை இங்கியிருக்க கேப்பைக்கூழு எங்கேயடி...??
ராசாத்தி :
நான் எட்டியெட்டிப் பாத்தாக்கா எம்மாபெரிய ஓட்டையுந்தான் பானைக்குள்ள இருக்குதடி...!!
ராசாத்தி கணவர் :
கொல பசியில் வாயுந்தான் காயுதடி வயித்துக்குள்ள ஏதோவொன்னு உருண்டு உருண்டு ஓடுதடி...!!
விட்டேன்னா அறவொன்னு விட்டத்துல ஏறிக்குவ படுபாவி...!!
ராசாத்தி :
அத்தான் என பாத்தப் பார்வையில பதறித்தான் ஓடிபுட்டேன்...!!
அலமேலு :
எங்கண புள்ள....??
ராசாத்தி :
வேறெங்கண என் ஆத்தா வூட்டுக்கு தேங்...!!
சரி வுன் கத என்ன சொல்லு கேட்பம் அக்காவ்...!!
(சுமதி சிவக்குமார்.. B. A., M. com., (co-op mgt)., M. A ., (yoga) ., DOM., (computer)., . கள்ளக்குறிச்சி மாவட்டம் மூஙகில்துறைப்பட்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது ஊரில் ஏரிக்கு நீர் கொண்டு வர இணையும் கைகள் என்றொரு அமைப்பை ஏற்படுத்தினார் உயர்திரு அப்துல் ரஹீம் அவர்கள். நீர் நிரம்பி இருமுறை கோடி போனது. அதனால் கோமுகி நதியை வாழ்த்தி நடந்தால் வாழீ கோமுகி என்ற கவிதையை பதிவிட்டார் சுமதி சிவக்குமார். முகநூலில் நிறைய கவிதை தளங்களில் கவிதைப் போட்டி நடுவராகவும் கவியரங்கம் தலைவராகவும் திகழ்கிறார். கிட்டத்தட்ட 3000 சான்றிதழ்கள் 50 ஷீல்டுகள் பரிசு பெற்றுள்ளார். நாட்டுப்புற பாடல் எழுதி பாடவும் செய்வார். மதியின் மதி என்ற கவிதை புத்தகம் , தெம்மாங்கு பாடலா என்ற நாட்டுப்புற பாடல்கள் புத்தகம் வெளியிட்டுள்ளார். சின்னசேலம் கண்ணதாசன் கலை இலக்கிய பேரவையின் செயலாளராக செயல்படுகிறார்)
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை
பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை
செப்.19-ல் திமுக முப்பெரும் விழா நடைபெறும்: கட்சி தலைமை அறிவிப்பு
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: தவெக, திமுக வேட்புமனுக்கள் ஏற்பு
டிசம்பர் 15ம் தேதியோடு கிளம்பிருங்க.. ஊழியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த அடிடாஸ்!
The Power of a Teacher
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் காலமானார்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
ஸ்கூல் போற குட்டீஸ் சரியா சாப்பிட மாட்டேங்குறாங்களா.. அட இதை செஞ்சு கொடுங்க!
{{comments.comment}}