100 நாள் வேலை .. சம்பளம் வேணும்னா.. ஆதார் நம்பரை இணைக்க வேண்டும்!

Aug 28, 2023,02:43 PM IST
டெல்லி: 100 நாள் வேலைத் திட்டத்தில் இனி சம்பளம் வாங்க வேண்டும் என்றால் உங்களது ஆதார் நம்பரை இணைக்க வேண்டும் என்று மத்திய  அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆதார் அட்டை அடிப்படையிலான சம்பள திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி இனிமேல் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை பார்ப்போர், சம்பளம் பெற வேண்டும் என்றால் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியமாகும். செப்டம்பர் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. தற்போது இந்தத் திட்டத்தில் சேர ஆகஸ்ட் 31ம் தேதி வரை மத்தியஅரசு அவகாசம் கொடுத்துள்ளது. அதற்குள் ஆதார் எண்ணை இணைத்து விட வேண்டும். அதைச் செய்யத் தவறினால் செப்டம்பர் 1ம் தேதி முதல் சம்பளம் வாங்க முடியாது.



தற்போது நாடு முழுவதும் உள்ள 2.77 கோடி 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களில் இதுவரை 19.4 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனராம்.  ஆனால் இந்தத் திட்டத்துக்கு பல்வேறு செயற்பாட்டாளர்களும் கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். இது சட்டவிரோதமானது என்று அவர்கள் வர்ணித்துள்ளனர்.

ஏழை மக்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருந்து வருவது 100 நாள் வேலைத் திட்டம். இந்தத் திட்டத்தை பலவீனமாக்கவும், இதில் இடம் பெற்றுள்ள ஏழைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவுமே மத்திய அரசு இப்படிச் செய்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மஸ்தூர் கிசான் சக்தி சங்கத்தின் தலைவரான நிகில் டேய் கூறுகையில், கிட்டத்தட்ட 20 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். இதுமிகப் பெரிய எண்ணிக்கையாகும். அதாவது 20 சதவீத ஏழைகளுக்கு வேலை வாய்ப்பு பறி போகப் போகிறது. ஆதார் எண் இணைப்பு என்பது மிகப் பெரிய சட்டவிரோதமான நடவடிக்கையாகும். 2005ம் ஆண்டு சட்டப்படி யாருக்கெல்லாம் வேலை பார்க்கத் தகுதி இருக்கிறதோ அவர்கள் எல்லாம் வேலை பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும். அதைத் தடுக்க முயற்சிக்கக் கூடாது என்றார்.

என்ன செய்ய வேண்டும்

மத்திய அரசின் திட்டப்படி 100 நாள் வேலைத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் தங்களது ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கை இணைத்து அந்த வங்கியின் கிளைக்குச் சென்று என்பிசிஐ மேப்பிங் விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி  செய்ய வேண்டும். இதைச் செய்யத் தவறினால் அவர்களுக்கு சம்பளம் கிடைக்காது, 100 நாள் வேலைத் திட்டத்தில் தொடரவும் முடியாது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்