டில்லி : ஆதார் எண் இருந்தால் மட்டுமே ரயில் டிக்கெட், குறிப்பாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்ற புதிய ரூல்ஸ் ஜூலை 01ம் தேதியான நாளை முதல் அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து விட்டது.
இந்திய ரயில்வேயின் அறிவிப்பின் படி, ரயில் டிக்கெட் எடுப்பதற்கு இனி ஆதார் எண் கட்டாயம். கவுன்ட்டரில் நேரில் சென்று எடுப்பதாக இருந்தாலும், ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்வதாக இருந்தாலும் அதற்கு ஆதார் எண் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு முறையை ஏஜன்ட்கள் பலரும் தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக ரயில்வே நிர்வாகம் இந்த புதிய முறையை கொண்டு வந்துள்ளது. இது ஜூலை 01 முதல் அமலுக்கு வர உள்ளது.

ஐஆர்சிடிசி அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் ஐஆர்சிடிசி இணையதளத்திற்குள் Login செய்து, உங்களின் அக்கவுண்ட்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஐஆர்சிடிசி ஆப் வைத்திருந்தால் உள்ளே சென்று, Account ஆப்ஷனில் சென்று, authentic user என்பதை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் விபரங்களையும், உங்களின் ஆதார் எண்ணையும் கொடுத்து, உங்களின் ஆதார் எண்ணை ஐஆர்சிடிசி கணக்குடன் இணைக்க வேண்டும். இப்படி இணைத்திருந்தால் மட்டுமே ஜூலை 01ம் தேதியான நாளை முதல் ஆன்லைனில் உங்களால் டிக்கெட் முன்பதிவு, தட்கல் டிக்கெட் முன்பதிவு ஆகியவற்றை செய்ய முடியும்.
ஆதார் எண்ணுடன் இணைக்காத அல்லது ஆதார் எண் இல்லாதவர்களால் இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. அதனால் நீங்கள் இதுவரை ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தால் இப்போதே இணைத்து விடுங்கள்.
LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}