டில்லி : ஆதார் எண் இருந்தால் மட்டுமே ரயில் டிக்கெட், குறிப்பாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்ற புதிய ரூல்ஸ் ஜூலை 01ம் தேதியான நாளை முதல் அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து விட்டது.
இந்திய ரயில்வேயின் அறிவிப்பின் படி, ரயில் டிக்கெட் எடுப்பதற்கு இனி ஆதார் எண் கட்டாயம். கவுன்ட்டரில் நேரில் சென்று எடுப்பதாக இருந்தாலும், ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்வதாக இருந்தாலும் அதற்கு ஆதார் எண் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு முறையை ஏஜன்ட்கள் பலரும் தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக ரயில்வே நிர்வாகம் இந்த புதிய முறையை கொண்டு வந்துள்ளது. இது ஜூலை 01 முதல் அமலுக்கு வர உள்ளது.

ஐஆர்சிடிசி அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் ஐஆர்சிடிசி இணையதளத்திற்குள் Login செய்து, உங்களின் அக்கவுண்ட்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஐஆர்சிடிசி ஆப் வைத்திருந்தால் உள்ளே சென்று, Account ஆப்ஷனில் சென்று, authentic user என்பதை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் விபரங்களையும், உங்களின் ஆதார் எண்ணையும் கொடுத்து, உங்களின் ஆதார் எண்ணை ஐஆர்சிடிசி கணக்குடன் இணைக்க வேண்டும். இப்படி இணைத்திருந்தால் மட்டுமே ஜூலை 01ம் தேதியான நாளை முதல் ஆன்லைனில் உங்களால் டிக்கெட் முன்பதிவு, தட்கல் டிக்கெட் முன்பதிவு ஆகியவற்றை செய்ய முடியும்.
ஆதார் எண்ணுடன் இணைக்காத அல்லது ஆதார் எண் இல்லாதவர்களால் இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. அதனால் நீங்கள் இதுவரை ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தால் இப்போதே இணைத்து விடுங்கள்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}