ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, கடலில் புனித நீராடி வழிபட்டனர்.
ஆடி அமாவாசை தினம் இன்று. இந்த நாளில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, தர்ப்பணம் செய்வது வழக்கம். ராமேஸ்வரம், திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மக்கள் இதற்காக கூடி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவார்கள். ராமேஸ்வரத்தில் அமாவாசை சமயங்களில் தர்ப்பணம் கொடுக்க மக்கள் அதிக அளவில் கூடுவார்கள். அந்த வகையில் இன்றும் மக்கள் தர்ப்பணம் கொடுக்கவும், திதி தரவும் கூடினர். இதனால் ராமேஸ்வரம் முழுவதும் கூட்டம் அலைமோதுகிறது . ராமநாதசாமி கோவிலில் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. நீண்ட வரிசையில் நின்று மக்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

ராமேஸ்வரத்தில் உள்ள 22 அக்னி தீர்த்தங்களிலும் பக்தர்கள் வரிசை நீண்டு காணப்படுகிறது. ராமேஸ்வரம் கோவில், கடற்கரை, அக்னி தீர்த்தங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆடி அமாவாசையையொட்டி விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
நெல்லையில் தாமிரபரணி ஆறு, திருச்செந்தூர், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, மதுரை வைகை நதி உள்ளிட்ட நீர் நிலைப் பகுதிகளில் இன்று தர்ப்பம் கொடுக்க, திதி தர ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியுள்ளனர்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}