முழு மனதோடு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறேன்...தினகரன் அதிரடி

Jan 21, 2026,05:06 PM IST

சென்னை: தமிழக சட்டசபை  தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் எதிர்காலத் திட்டம் குறித்து விரிவான பேட்டியளித்துள்ளார்.


கூட்டணி குறித்துப் பேசிய டிடிவி தினகரன், "நான் இந்தத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முழு மனதோடு வந்திருக்கிறேன். கடந்த காலங்களில் எங்களுக்குள் இருந்த கசப்பான சம்பவங்களையும், எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் முழுமையாகத் தூக்கி எறிந்துவிட்டு, ஒருமித்த கருத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளோம்," என்று தெரிவித்தார்.மேலும், தங்களுக்குள் இருந்த 'பங்காளிச் சண்டைகளை' ஓரம் வைத்து விட்டு, தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்திருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.




தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவதில் அமமுக ஒரு முக்கியத் தூணாகச் செயல்படும் என்று குறிப்பிட்ட அவர், கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்குக் கிடைக்காமல் போன வெற்றியை இந்த முறை ஈடுகட்டப் போவதாக உறுதிபடக் கூறினார்."2021-ஆம் ஆண்டு அமைக்கத் தவறிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியை, இந்த முறை நாம் அனைவரும் இணைந்து அமைத்தே தீருவோம். அதற்கான உறுதுணையாக அமமுக இருக்கும்."


இந்தக் கூட்டணியின் மூலம் தமிழகத்தில் ஒரு வலுவான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பாக, கடந்த காலப் பிணக்குகளை மறந்து, ஒரு இலக்கை நோக்கிப் பயணிப்பதே தற்போதைய அவசியம் என்பதை அவர் தனது பேட்டியின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் முன்னிலையில் டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இணைந்ததுடன், செய்தியாளர்களையும் சந்தித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்