"மிக்ஜாம் புயல்"... மக்களுக்கு சேவையாற்றிய ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு விருந்து வைத்த நடிகர் சூர்யா

Mar 04, 2024,02:24 PM IST

சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகள் உதவி செய்தனர். அவர்கள் அனைவரையும் அழைத்து சைவ விருந்து வைத்து கெளரவித்துள்ளார் நடிகர் சூர்யா.


மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் செய்த கனமழை போன்றவற்றால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து பொதுமக்கள் செய்வது அறியாது திகைத்து நின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காகவும் பெரிதும் தவித்து வந்தனர். அப்போது, அரசு மற்றும் தன்னார்வலர்கள் தங்களால் முயன்ற உதவிகளைச் செய்து வந்தனர். குறிப்பாக விஜய், சூர்யா, பார்த்திபன், அறந்தாங்கி நிஷா, கேபிஒய் பாலா உள்ளிட்ட பலரும் தங்ளால் இயன்ற உதவிகளைச் செய்து வந்தனர்.




இந்நிலையில், தங்கள் உயிரைப் பற்றி கூட கவலைப்படாமல் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் இறங்கி நிவாரண உதவிகளை வழங்கினர்  நடிகர்  சூர்யாவின் ரசிகர் மன்ற தலைவர்கள். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி களப்பணியில் ஈடுபட்டனர். அவரது ரசிகர்களின் இச்செயல்களை பாராட்டி அவர்களை அழைத்து நடிகர் சூர்யா விருந்து வைத்துள்ளார். 


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தவர்கள்  மற்றும்  சமீபத்தில் திருமணம் நடந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் குடும்பத்துடன் அழைத்து விருந்து வைத்துள்ளார் நடிகர் சூர்யா. சூர்யாவின் இச்செயலுக்கு சூர்யாவின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் , சூர்யா அவர்களுடன் இணைந்து புகைப்படங்களையும் எடுத்துள்ளார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் சூர்யா தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு விருந்து வைத்து அசத்தியுள்ளது இச்சம்பவம் ரசிகர்ளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!

news

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

அதிகம் பார்க்கும் செய்திகள்