சென்னை: 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகிற்குத் திரும்புகிறார் அப்பாஸ். ஜி.வி. பிரகாஷின் 'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தில் அவர் இணைந்துள்ளார்.
காதல் தேசம் படத்தில் அறிமுகமானவர் அப்பாஸ். அவரது சாக்லேட் பாய் தோற்றம் அவருக்கு அப்போதைய இளசுகள் மத்தியில் பெரிய மவுசைத் தேடிக் கொடுத்தது. தொடர்ந்து படையப்பா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட நடிகர் அப்பாஸ், மின்னலே படத்தில் பெரிதாக பேசப்பட்டார். பின்னர் இடையில் திடீரென காணாமல் போனார். ஹார்பிக் விளம்பரத்தில் அவர் நடித்தபோது அட நம்ம அப்பாஸா என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
இந்த நிலையில், 12 வருடங்களுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகிற்கு மீண்டும் வரவுள்ளார். ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் நுழைகிறார். இந்தப் படத்திற்கு 'ஹேப்பி ராஜ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் லவ்வர் படம் புகழ் ஸ்ரீ கௌரி ப்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் அப்பாஸ் நடிக்கவுள்ளார்.
அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்சேசியன் இப்படத்தை இயக்குகிறார். இவர் இதற்கு முன் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜ் மரியான், பிரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து மற்றும் சோஃபா பாய் ரசூல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்குநர் மரியா இளஞ்சேசியன் இந்தப் படத்திற்கு 'ஹேப்பி ராஜ்' என்று பெயரிட்டதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். "சினிமாவில் மகிழ்ச்சியின் கொண்டாட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற எளிமையான ஆனால் ஆழமான இலக்கில் இருந்து இந்தப் பெயர் வந்தது. இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்களால் நிரம்பியிருக்கும் நிலையில், சோகத்திற்கான ஒரு மாற்று மருந்தாக இருக்கும் ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று நான் உண்மையாகவே உணர்ந்தேன். உண்மையில், படத்தில் 'ஹேப்பி' என்ற வார்த்தையை நீங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட முறை கேட்கலாம். இது ஒரு வெறுமையான திரும்பத் திரும்பச் சொல்லல் அல்ல, மாறாக நம்பிக்கையின் ஒரு தாள மந்திரம்," என்று அவர் கூறினார்.
ஜி.வி. பிரகாஷ் தற்போது ஹேப்பி ராஜ் தவிர, செல்வராகவன் இயக்கும் மென்டல் மனதில் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் மற்றொரு படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}