சென்னை: பொது இடங்களில் க.. அஜீத்தே என்று அநாகரீகமாக, மக்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தும் வகையில் கோஷமிடுவதை நான் விரும்பவில்லை. இனிமேல் இதுபோல செய்யாதீர்கள் என்று நடிகர் அஜீத் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர்களிலேயே மிக மிக வித்தியாசமானவராக இருக்கிறார் அஜீத். தேவையில்லாத செயல்களில் அவர் ஈடுபடுவதில்லை. திரைத்துறை தொடர்பான எந்த விழாக்களிலும் பங்கேற்பதில்லை. அவரது படங்களுக்கு ஆடியோ வெளியீட்டு விழாவே நடந்ததில்லை. காரணம், அஜீத் வருவதில்லை. தனது பட்டப் பெயர்களையும் கூட இனிமேல் அழைக்க வேண்டாம் என்று சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தார். எனது பெயரில் மட்டுமே தன்னை அழைக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார். தனது ரசிகர் மன்றங்களையும் கூட சில வருடங்களுக்கு முன்பே கலைத்தும் விட்டார்.
இந்த நிலையில் சமீப காலமாக பொது இடங்களில் கடவுளே அஜீத்தே என்ற கோஷத்தை சிலர் முழங்கி மக்களுக்கு கடும் எரிச்சலூட்டி வருகின்றனர். இவர்கள் அஜீத் ரசிகர்களாக மட்டுமல்லாமல், மற்றவர்களும் கூட இதுபோல கத்துவதை வழக்கமாக்கி வருவதால் மக்களிடையே கடும் எரிச்சல் அதிகரித்து வருகிறது.
விஜய் கட்சி மாநாட்டின்போதும் இப்படிக் கத்தினார்கள். சமீபத்தில் அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் நடத்திய கூட்டத்திலும் கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏன் இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. இப்போது அந்த அநாகரீக செயலை அஜீத்தே கண்டித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சமீப காலமாக முக்கியமான நிகழ்வுகளில் பொதுவெளியில் அநாகரிகமாக தேவையில்லாமல் எழுப்பப்படும் க... அஜித்தே என்ற இந்த கோஷம் என்னை கவலை அடையச் செய்திருக்கிறது.
எனது பெயரை தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
எனவே பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசவுகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார் அஜீத்.
இனிமேலாவது அஜீத் பெயரை தவறாக பயன்படுத்தாதீங்கப்பா...!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}