சென்னை: பொது இடங்களில் க.. அஜீத்தே என்று அநாகரீகமாக, மக்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தும் வகையில் கோஷமிடுவதை நான் விரும்பவில்லை. இனிமேல் இதுபோல செய்யாதீர்கள் என்று நடிகர் அஜீத் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர்களிலேயே மிக மிக வித்தியாசமானவராக இருக்கிறார் அஜீத். தேவையில்லாத செயல்களில் அவர் ஈடுபடுவதில்லை. திரைத்துறை தொடர்பான எந்த விழாக்களிலும் பங்கேற்பதில்லை. அவரது படங்களுக்கு ஆடியோ வெளியீட்டு விழாவே நடந்ததில்லை. காரணம், அஜீத் வருவதில்லை. தனது பட்டப் பெயர்களையும் கூட இனிமேல் அழைக்க வேண்டாம் என்று சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தார். எனது பெயரில் மட்டுமே தன்னை அழைக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார். தனது ரசிகர் மன்றங்களையும் கூட சில வருடங்களுக்கு முன்பே கலைத்தும் விட்டார்.
இந்த நிலையில் சமீப காலமாக பொது இடங்களில் கடவுளே அஜீத்தே என்ற கோஷத்தை சிலர் முழங்கி மக்களுக்கு கடும் எரிச்சலூட்டி வருகின்றனர். இவர்கள் அஜீத் ரசிகர்களாக மட்டுமல்லாமல், மற்றவர்களும் கூட இதுபோல கத்துவதை வழக்கமாக்கி வருவதால் மக்களிடையே கடும் எரிச்சல் அதிகரித்து வருகிறது.
விஜய் கட்சி மாநாட்டின்போதும் இப்படிக் கத்தினார்கள். சமீபத்தில் அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் நடத்திய கூட்டத்திலும் கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏன் இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. இப்போது அந்த அநாகரீக செயலை அஜீத்தே கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சமீப காலமாக முக்கியமான நிகழ்வுகளில் பொதுவெளியில் அநாகரிகமாக தேவையில்லாமல் எழுப்பப்படும் க... அஜித்தே என்ற இந்த கோஷம் என்னை கவலை அடையச் செய்திருக்கிறது.
எனது பெயரை தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
எனவே பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசவுகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார் அஜீத்.
இனிமேலாவது அஜீத் பெயரை தவறாக பயன்படுத்தாதீங்கப்பா...!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}