சென்னை: பொது இடங்களில் க.. அஜீத்தே என்று அநாகரீகமாக, மக்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தும் வகையில் கோஷமிடுவதை நான் விரும்பவில்லை. இனிமேல் இதுபோல செய்யாதீர்கள் என்று நடிகர் அஜீத் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர்களிலேயே மிக மிக வித்தியாசமானவராக இருக்கிறார் அஜீத். தேவையில்லாத செயல்களில் அவர் ஈடுபடுவதில்லை. திரைத்துறை தொடர்பான எந்த விழாக்களிலும் பங்கேற்பதில்லை. அவரது படங்களுக்கு ஆடியோ வெளியீட்டு விழாவே நடந்ததில்லை. காரணம், அஜீத் வருவதில்லை. தனது பட்டப் பெயர்களையும் கூட இனிமேல் அழைக்க வேண்டாம் என்று சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தார். எனது பெயரில் மட்டுமே தன்னை அழைக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார். தனது ரசிகர் மன்றங்களையும் கூட சில வருடங்களுக்கு முன்பே கலைத்தும் விட்டார்.
இந்த நிலையில் சமீப காலமாக பொது இடங்களில் கடவுளே அஜீத்தே என்ற கோஷத்தை சிலர் முழங்கி மக்களுக்கு கடும் எரிச்சலூட்டி வருகின்றனர். இவர்கள் அஜீத் ரசிகர்களாக மட்டுமல்லாமல், மற்றவர்களும் கூட இதுபோல கத்துவதை வழக்கமாக்கி வருவதால் மக்களிடையே கடும் எரிச்சல் அதிகரித்து வருகிறது.
விஜய் கட்சி மாநாட்டின்போதும் இப்படிக் கத்தினார்கள். சமீபத்தில் அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் நடத்திய கூட்டத்திலும் கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏன் இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. இப்போது அந்த அநாகரீக செயலை அஜீத்தே கண்டித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சமீப காலமாக முக்கியமான நிகழ்வுகளில் பொதுவெளியில் அநாகரிகமாக தேவையில்லாமல் எழுப்பப்படும் க... அஜித்தே என்ற இந்த கோஷம் என்னை கவலை அடையச் செய்திருக்கிறது.
எனது பெயரை தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
எனவே பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசவுகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார் அஜீத்.
இனிமேலாவது அஜீத் பெயரை தவறாக பயன்படுத்தாதீங்கப்பா...!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}