சென்னை: விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், நடிகர் அஜித் குமார் புதிய ஃபெராரி காரை வாங்கியுள்ளார். அந்த காருடன் நடிகர் அஜித் குமார் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
அஜித் கடந்த 2 வருடங்களாக நடித்து வரும் படம் தான் விடாமுயற்சி. லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பல மாதங்களாக அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்தது.
படத்தின் ஷூட்டிங் முடிந்து, ரிலீஸ் தேதி முடிவு செய்வதற்கு முன்னதாக இப்போதே படத்தின் வியாபாரத்தை துவக்கி விட்டது படக்குழு. டிவி வெளியீட்டு உரிமத்தை சன் டிவியும், ஓடிடி ரிலீஸ் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனமும் வாங்கி விட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த இரு நிறுவனங்களும் ரூ.250 கோடிக்கு விடாமுயற்சி படத்தை வாங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ.225 கோடி தான். இந்த படத்திற்கு அஜித்திற்கு சம்பளமாக மட்டும் ரூ.160 கோடி வரை கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ள நிலையில், துபாய் சென்ற அஜித் ரூ.9 கோடிக்கு ஃபெராரி காரை வாங்கியுள்ளார். கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ்ஸில் அதிக விருப்பம் கொண்டவர் அஜித்குமார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் பைக் மற்றும் கார் ஓட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். கார் மற்றும் பைக் ரேசின் போது பல விபத்துகளில் சிக்கிய அஜித்குமார், பல சர்ஜரிகளை செய்திருந்தும், அவருக்கு கார் மற்றும் பைக் மீது குறையாத காதலுடன் உள்ளார்.
அஜித்திடம் ஏற்கனவே ரூ.34 கோடி மதிப்புள்ள லம்போர்கினி, லேண்ட் ரோவர் டிஸ்கவரி, மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட சொகுசு கார்கள் உள்ள நிலையில், தற்போது ஃபெராரியையும் வாங்கி இணைத்துள்ளார்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}