ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தின் முதல் காட்சியை காண சென்றபோது திரையரங்கத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து தற்போது உயிருக்குப் போராடி வரும் நிலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை போலீசார் அனுமதியுடன் இன்று மருத்துவமனையில் சென்று சந்தித்தார் நடிகர் அல்லு அர்ஜுன்.
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில், உள்ளிட்ட பலர் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் பான் இந்தியா படமாக கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி மூன்றே நாட்களில் 600 கோடி ரூபாயை வசூலில் சாதனை படைத்தது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வந்தது.
ஹைதராபாத் சந்தியா திரையரங்கத்தில் டிசம்பர் நான்காம் தேதி இரவு 9.40 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இந்த சிறப்பு காட்சியைப் பார்க்க திரளான ரசிகர் பட்டாளங்கள் ஒன்று கூடினர். அப்போது பாஸ்கர் என்பவர் தனது மனைவி ரேவதி, மகன் சாய் தேஜா மற்றும் மகளுடன் வந்ததார். நடிகர் அல்லு அர்ஜூனைப் பார்க்க முண்டியடித்துக் கொண்டு ரசிகர்கள் வந்ததால் திரையரங்கில் தள்ளுமுள்ளு நடைபெற்றது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி (39) மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் தேஜா காயமடைந்தார். காயமடைந்த மகன் தேஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜூன் 25 லட்சம் இழப்பீடு வழங்கினார். சிறுவன் தேஜாவின் மருத்துவ செலவையும் பார்த்து வருகிறார். கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் தேஜா. இதுதொடர்பான வழக்கில் ஹைதராபாத் போலீஸார் அல்லு அர்ஜூனை கைது செய்தனர். அவர் தற்போது ஜாமினில் உள்ளார்.
இந்த நிலையில் சிறுவன் தேஜாவை, மருத்துவமனையில் சென்று சந்திக்க நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று போலீசாரிடம் அனுமதி கோரியிருந்தார். ஆனால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு இருப்பதாகவும், மருத்துவமனைக்கு அல்லு அர்ஜுன் வந்தால் மேலும் கூட்டம் நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்பதாலும் அனுமதிக்க போலீஸார் மறுத்து வந்தனர்.
இதற்கிடையே, காயமடைந்த சிறுவனுக்கு மருத்துவ செலவை ஏற்றுள்ள அல்லு அர்ஜுனை காண போலீசார் அனுமதி மறுப்பது குற்றம் என பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சிறுவனை சென்று சந்திக்க அனுமதி தெரிவித்திருந்த நிலையில் இன்று அல்லு அர்ஜுன் படுகாயம் அடைந்த சிறுவனை மருத்துவமனையில் சென்று சந்தித்தார். போலீஸ் பாதுகாப்புடன் சென்று அல்லு அர்ஜூன், சிறுவனை சந்தித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
CSK Vs MI: சேப்பாக்கத்தில் அசத்திய சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிரமாத வெற்றி.. கார்த்திக் சர்மா அபாரம்!
Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக
என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?
Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!
பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!
அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!
கண்ணும் கண்ணும் நோக்கினால்!
அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?
ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)
{{comments.comment}}