அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதி...பொது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

Mar 16, 2026,10:08 PM IST

சென்னை : தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் (Model Code of Conduct) உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.


பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விதிமுறைகள் :


1. பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள் :


தேர்தல் நேரத்தில் ரொக்கப் பணத்தைக் கையாள்வதில் தேர்தல் ஆணையம் மிகவும் தீவிரமாக உள்ளது.




ரூ. 50,000 வரம்பு: உரிய ஆவணங்கள் இன்றி ஒரு நபர் ரூ. 50,000-க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் செல்லக்கூடாது. பறக்கும் படையினர் சோதனையின் போது இந்தத் தொகை பிடிபட்டால், அதற்கான ஆதாரங்களைக் காட்டாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படும்.


ரூ. 10 லட்சத்திற்கு மேல்: ஒருவரிடம் ரூ. 10 லட்சத்திற்கும் மேல் ரொக்கம் இருந்தால், அது உடனடியாக வருமான வரித்துறைக்குத் தெரிவிக்கப்படும்.


பரிசுப் பொருட்கள்: ரூ. 10,000-க்கு மேல் மதிப்புள்ள புதிய பொருட்கள், மதுபானங்கள் அல்லது ஆயுதங்கள் கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும்.


2. ஆன்லைன் பணப் பரிவர்த்தனை (UPI & Net Banking): 


இன்றைய டிஜிட்டல் யுகத்தில், கூகுள் பே (GPay), போன்பே (PhonePe) போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகளும் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் உள்ளன.


சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள்: வங்கிக் கணக்குகளில் வழக்கத்திற்கு மாறாக ஒரே நேரத்தில் பலருக்கு சிறிய தொகைகள் (உதாரணமாக ரூ. 500, ரூ. 2000) அனுப்பப்பட்டால், அந்த வங்கிக் கணக்கு முடக்கப்பட வாய்ப்புள்ளது.


ரூ. 1 லட்சம் டெபாசிட்/வித்ட்ராவல்: தேர்தல் காலத்தில் ஒருவரின் வங்கிக் கணக்கில் ஒரே நாளில் ரூ. 1 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டாலோ அல்லது எடுக்கப்பட்டாலோ அது குறித்த தகவலை வங்கிகள் தேர்தல் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்.


பலரும் அறியாத முக்கிய தகவல்கள் :


3. தாலிக்கு தங்கம்/திருமணச் செலவு: திருமணத்திற்காக நகை அல்லது அதிக பணம் கொண்டு செல்பவர்கள், திருமண அழைப்பிதழ் மற்றும் நகை வாங்கிய ரசீது போன்றவற்றை வைத்திருக்க வேண்டும்.


4. வியாபாரிகள் கவனத்திற்கு: வணிக ரீதியாக பணம் கொண்டு செல்லும் வியாபாரிகள், தங்கள் நிறுவனத்தின் லெட்டர் பேட், ஜிஎஸ்டி (GST) சான்றிதழ் மற்றும் பணத்திற்கான ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும்.


பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மீட்பது எப்படி?: 


பறிமுதல் செய்யப்பட்ட பணம் வேட்பாளருடன் தொடர்புடையது அல்ல என்று நிரூபித்தால், மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள 'குறை தீர்க்கும் குழு' (Grievance Committee) மூலம் பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் வெளியூர்களுக்குச் செல்லும் போது அவசியமற்ற முறையில் அதிக ரொக்கப் பணத்தைத் தவிர்த்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது தேவையற்ற சோதனைகளையும் அலைச்சல்களையும் தவிர்க்க உதவும்.

இது போன்ற தேர்தல் தொடர்பான கூடுதல் சந்தேகங்கள் அல்லது புகார்களுக்கு 1950 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை

news

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்