சென்னை: வெறுமனே இரங்கல் என்று இதை சொல்லி விட முடியாது. எனது அண்ணனே இறந்து விட்டது போல வேதனைப்படுகிறேன்.. மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு குறித்து ஆனந்தராஜ் கூறியதாவது:
மிகவும் மனதிற்கு கவலையாக இருக்கு. அவர் இறந்ததற்கு நிறைய காரணம் சொல்றாங்க. இன்னும் கொஞ்ச நாள் அவரு நம்ம கூட இருந்திருக்கலாம். இருந்தாலும் அவர் குடும்பத்தாருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் என அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

நட்புக்கு மிகுந்த மரியாதை கொடுத்தவர். நல்ல மனிதர் பல ஆண்டுகள் அவர் கூட நான் பழகிட்டு வரேன். நட்புக்கு நல்ல மரியாதை கொடுக்க கூடிய அவர், ஒரு அண்ணன் மாதிரி குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்வாரு நானும் நல்ல முறையில் தான் பழகி வந்தேன்.
30 ஆண்டு காலமாக அவரோட நான் பயணிச்சிருக்கேன். அவர் தனி ஒரு பாலிசி வச்சிருப்பாரு, நட்புரீதியில் அவர் கூட இருந்ததுனால சொல்றேன் அவரு ரெண்டு பிள்ளைங்களுக்கு திருமணம் முடிஞ்சதுக்கு அப்புறம் இந்த மாதிரி இறந்திருந்தா கூட பரவால்ல. இன்னும் கொஞ்சம் கால அவரும் நம்ம கூட இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.
இது ஏற்றுக்கொள்ள முடியாதது. நடிகர் சங்கத்தில் அவர் தலைவரா இருக்கும்போது நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் எல்லாம் பணியையும் செஞ்சுருக்கோம். நட்பு ரீதியா ஒரு சங்கத்துக்கு எவ்வளவோ செஞ்சு இருக்காரு. அவரு செஞ்சது எல்லாம் என் கண் முன்னாடியே இருக்கு. ரொம்ப அன்பானவரு. எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அவரு எல்லாருக்கும் கொடுக்குற மரியாதை ரொம்ப பிடித்த விஷயம். உண்மையில் அவரு சாகல அவரு நம்ம கூட தான் இருக்காரு. அவர் இறந்துட்டாருன்றது என்னால ஏத்துக்கவே முடியல. அவர் நீண்ட காலம் இருக்கணும்னு தான் என்னோட ஆசை. கலைஞராகவும் நடிகராகவும் அவர் நீண்ட காலம் இருந்திருக்கணும் என்றார் ஆனந்தராஜ்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}