சென்னை: வெறுமனே இரங்கல் என்று இதை சொல்லி விட முடியாது. எனது அண்ணனே இறந்து விட்டது போல வேதனைப்படுகிறேன்.. மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு குறித்து ஆனந்தராஜ் கூறியதாவது:
மிகவும் மனதிற்கு கவலையாக இருக்கு. அவர் இறந்ததற்கு நிறைய காரணம் சொல்றாங்க. இன்னும் கொஞ்ச நாள் அவரு நம்ம கூட இருந்திருக்கலாம். இருந்தாலும் அவர் குடும்பத்தாருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் என அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.
நட்புக்கு மிகுந்த மரியாதை கொடுத்தவர். நல்ல மனிதர் பல ஆண்டுகள் அவர் கூட நான் பழகிட்டு வரேன். நட்புக்கு நல்ல மரியாதை கொடுக்க கூடிய அவர், ஒரு அண்ணன் மாதிரி குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்வாரு நானும் நல்ல முறையில் தான் பழகி வந்தேன்.
30 ஆண்டு காலமாக அவரோட நான் பயணிச்சிருக்கேன். அவர் தனி ஒரு பாலிசி வச்சிருப்பாரு, நட்புரீதியில் அவர் கூட இருந்ததுனால சொல்றேன் அவரு ரெண்டு பிள்ளைங்களுக்கு திருமணம் முடிஞ்சதுக்கு அப்புறம் இந்த மாதிரி இறந்திருந்தா கூட பரவால்ல. இன்னும் கொஞ்சம் கால அவரும் நம்ம கூட இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.
இது ஏற்றுக்கொள்ள முடியாதது. நடிகர் சங்கத்தில் அவர் தலைவரா இருக்கும்போது நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் எல்லாம் பணியையும் செஞ்சுருக்கோம். நட்பு ரீதியா ஒரு சங்கத்துக்கு எவ்வளவோ செஞ்சு இருக்காரு. அவரு செஞ்சது எல்லாம் என் கண் முன்னாடியே இருக்கு. ரொம்ப அன்பானவரு. எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அவரு எல்லாருக்கும் கொடுக்குற மரியாதை ரொம்ப பிடித்த விஷயம். உண்மையில் அவரு சாகல அவரு நம்ம கூட தான் இருக்காரு. அவர் இறந்துட்டாருன்றது என்னால ஏத்துக்கவே முடியல. அவர் நீண்ட காலம் இருக்கணும்னு தான் என்னோட ஆசை. கலைஞராகவும் நடிகராகவும் அவர் நீண்ட காலம் இருந்திருக்கணும் என்றார் ஆனந்தராஜ்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}