சென்னை: நடிகர் தனுஷ் கமிட்டான புதிய படத்திற்கு கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன் என பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் முதலில் நடிகராக அறிமுகமாகி, பின்னர் மெல்ல மெல்ல தனது விடாமுயற்சியால் உயர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து மக்கள் மனதில் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்துள்ளார்.
இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் ஒரு பாடகராகவும், தயாரிப்பாளராகவும், பன்முகத் திறமைகளை பெற்றுள்ளார்.மேலும் இயக்குனராகவும் களமிறங்கிய நடிகர் தனுஷ் தனது ஐம்பதாவது படமான ராயன் திரைப்படத்தை நடித்து,இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தன. இதனை தொடர்ந்து மீண்டும் நிலவுக்கு என்னடி என் மேல் கோபம் திரைப்படத்தை இயக்கினார்.
ஆனால் இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடையவில்லை. இதனை எடுத்து தனுஷ் நடிப்பில் இட்லி கடை, குபேரா, தேரே இஷ்க் மெய்ன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆக வரிசை கட்டி உள்ளன. கோலிவுட்டில் தற்போது இட்லி கடை திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்து வருகின்றனர். அதே சமயத்தில் தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையே இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை மெர்குரி பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. மேலும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், திரைக் கதையை கமலஹாசன் எழுத இருக்கிறார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மீது அதிகரித்தது. ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மட்டுமே வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் புதிய படத்தில் கமிட்டாகி உள்ளார். இப்படத்தின் அப்டேட்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி, மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த புதிய படத்திற்கு கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குனர் ஆதி புரூஸ் இயக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}