ஜிகர்தண்டா 2 -லாரன்ஸின் புதிய அவதாரம்.. அருமையான படைப்பு.. தனுஷ் புகழாரம்!

Nov 10, 2023,12:19 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ராகவா லாரன்ஸ் மிகவும் அருமையாக நடித்துள்ளார். ஒரு பெர்பார்மராக உருவெடுத்துள்ளார். அற்புதமான படைப்பு.. கடைசி 40 நிமிடம் இந்த திரைப்படம் உங்கள் இதயத்தை திருடிவிடும் என நடிகர் தனுஷ் புகழ்ந்துள்ளார்.


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு ஜிகர்தண்டா படம் வெளிவந்தது. இந்த படம் மதுரை மையமாக கொண்ட கதைக்களம் என்பதால் நல்ல வரவேற்பு பெற்று ஹிட் கொடுத்தது . ஒரு தாதா கதைதான்.. ஆனால் அதில் காமெடியைக் கலந்து மதுரை ஸ்டைலில் படத்தைக் கொடுத்ததால் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.


அதேபோன்று தற்போது அதன் 2ம் பாகத்தை, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பெயரில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளிவந்தபோதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லாரன்ஸ் வழக்கத்திற்கு மாறாக தன் தோற்றம் மேனரிசம் முதல் அனைத்தையும் மாற்றி வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.  சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படம் இன்று திரைக்கு வந்துள்ளது.




ராகவா லாரன்ஸ் தொடர்ச்சியாக குடும்பங்களை மையமாகக் கொண்ட நகைச்சுவை கலந்த ஹாரர் படங்கள் மூலம் பல வெற்றிகளை தந்தவர். சமீபத்தில் வெளிவந்த சந்திரமுகி 2 படத்திலும் அதே பாணியில்  நடித்திருந்தார். இப்படம் சரியாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா 2 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.


நடிகர் தனுஷ் இப்படத்தையும், நடிகர் ராகவாரன்ஸ் நடிப்பையும், பாராட்டியே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில், ஜிகர்தண்டா டபுள்  எக்ஸ் படம் பார்த்தேன். கார்த்திக் சுப்புராஜின் அருமையான படைப்பு .. அற்புதமான நடிப்பை தருவது எஸ் ஜே சூர்யாவுக்கு வழக்கமாகிவிட்டது. ஒரு நடிகராக லாரன்ஸ் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு அழகு . கடைசி 40 நிமிடம் இந்த திரைப்படம் உங்கள் இதயத்தை திருடிவிடும். படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.


நடிகர் தனுஷின் பதிவிட்டிற்கு நன்றி தெரிவித்து நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள டிவீட்டில், சகோதரரே உங்கள் அன்பான வார்த்தைக்கு மிக்க நன்றி. உங்களின் கேப்டன் மில்லர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய ராகவேந்திரா ஸ்வாமியை பிரார்த்திக்கிறேன் என்று தனது நன்றியை பதிவிட்டுள்ளார்.


இரண்டு முன்னணி நடிகர்களின் சலனம் இல்லாத உரையாடல்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .இதனை ரசிகர்கள் பாராட்டி பகிர்ந்து வருகின்றனர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளிவந்த ஜெகமே தந்திரம்  ரசிகர்களின் வரவேற்பைப் பெறத் தவறியது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்