மன்சூர் அலிகானுக்கு என்னாச்சு?.. விஷம் கலந்த ஜூஸைக் கொடுத்ததாக குமுறல்.. பரபர தகவல்!

Apr 18, 2024,10:37 AM IST

வேலூர்: பிரச்சாரத்தின் போது  மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவர் சென்னை அழைத்து வரப்பட்டு தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனக்கு விஷம் கலந்த பானம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று மன்சூர் அலிகான் கூறியுள்ளார். 


நடிகர் மன்சூர் அலிகான், வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக இந்தத் தொகுதியில் விதவிதமா.. வித்தியாசமா.. என்ற தொலைக்காட்சி விளம்பரம் போல் கறி வெட்டுவது என்ன.. காய்கறி விற்பது என்ன.. ரிக்ஷா இழுப்பதென்ன.. பலாப்பழத்தைக் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்வது என்ன..  இப்படி பல  நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். 


இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மயக்கம் வந்துள்ளது. நெஞ்சில் வலிப்பது போல இருக்கவே, வலி தாங்க முடியாமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு ட்ரீட்மென்ட் கொடுத்தும் அவருக்கு வலி நிற்காத காரணத்தால் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கு கே எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில்  இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மன்சூர் அலிகான். அதில் அவர் கூறியதாவது:




நேற்று குடியாத்தம் சந்தையில் இருந்து திரும்பி ஒரு இடத்தில் கட்டாயப்படுத்தி பழ ஜூஸ் கொடுத்தாங்க. அதன் பிறகு மோர் கொடுத்தாங்க. குடிச்ச உடனேயே வண்டியில் இருந்து விழும் நிலையில் இருந்தேன். மயக்கம், அடி நெஞ்சில் தாங்க முடியாத வலி. பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க. ட்ரீட்மெண்ட் கொடுத்தும் வலி நிற்கவில்லை.


வலி அதிகமான காரணத்தால் சென்னை கே எம் நர்சிங் ஹோமுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கூட்டிட்டு வந்து ஐ சி.யூ  ல அட்மிட் பண்ணாங்க . இப்ப கொஞ்சம் வலி கம்மியா இருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி  போக டிரிப்ஸ் கொடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என கூறப்படுகிறது என தகவல் கொடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

news

ஓடி விளையாடு பெண்ணே

news

என்னடா ஆண்டவருக்கு வந்த சோதனை...ஓடிடி.,யில் முன் கூட்டியே ரிலீசாகிறதா கமல்ஹாசனின் தக்லைஃப்?

news

செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் வைகாசி மாத பௌர்ணமி.. சிறப்பு!

news

தக்லைஃப் படத்தின் வழக்கு ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்