மன்சூர் அலிகானுக்கு என்னாச்சு?.. விஷம் கலந்த ஜூஸைக் கொடுத்ததாக குமுறல்.. பரபர தகவல்!

Apr 18, 2024,10:37 AM IST

வேலூர்: பிரச்சாரத்தின் போது  மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவர் சென்னை அழைத்து வரப்பட்டு தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனக்கு விஷம் கலந்த பானம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று மன்சூர் அலிகான் கூறியுள்ளார். 


நடிகர் மன்சூர் அலிகான், வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக இந்தத் தொகுதியில் விதவிதமா.. வித்தியாசமா.. என்ற தொலைக்காட்சி விளம்பரம் போல் கறி வெட்டுவது என்ன.. காய்கறி விற்பது என்ன.. ரிக்ஷா இழுப்பதென்ன.. பலாப்பழத்தைக் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்வது என்ன..  இப்படி பல  நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். 


இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மயக்கம் வந்துள்ளது. நெஞ்சில் வலிப்பது போல இருக்கவே, வலி தாங்க முடியாமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு ட்ரீட்மென்ட் கொடுத்தும் அவருக்கு வலி நிற்காத காரணத்தால் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கு கே எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில்  இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் மன்சூர் அலிகான். அதில் அவர் கூறியதாவது:




நேற்று குடியாத்தம் சந்தையில் இருந்து திரும்பி ஒரு இடத்தில் கட்டாயப்படுத்தி பழ ஜூஸ் கொடுத்தாங்க. அதன் பிறகு மோர் கொடுத்தாங்க. குடிச்ச உடனேயே வண்டியில் இருந்து விழும் நிலையில் இருந்தேன். மயக்கம், அடி நெஞ்சில் தாங்க முடியாத வலி. பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க. ட்ரீட்மெண்ட் கொடுத்தும் வலி நிற்கவில்லை.


வலி அதிகமான காரணத்தால் சென்னை கே எம் நர்சிங் ஹோமுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கூட்டிட்டு வந்து ஐ சி.யூ  ல அட்மிட் பண்ணாங்க . இப்ப கொஞ்சம் வலி கம்மியா இருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி  போக டிரிப்ஸ் கொடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என கூறப்படுகிறது என தகவல் கொடுத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

புதுவருட டைரி!

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்