"கேப்டன்.. செய்த மனிதநேயத்தை.. நாம் தொடர வேண்டும்.. அதுதான் அஞ்சலி".. பார்த்திபன் வேண்டுகோள்!

Dec 29, 2023,12:22 PM IST

சென்னை: கேப்டன் விஜயகாந்த் காட்டிய மனிதநேயத்தை.. செய்த நல்ல காரியங்களை நாம் தொடர வேண்டும்.. அதுதான் நாம் அவருக்கு செய்ய வேண்டிய உண்மையான அஞ்சலி.. என நடிகர் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


விஜயகாந்த்துக்கு மலர் மரியாதை செலுத்திய பின்னர் நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது: 




மரணம் எல்லோருக்கும் வரும். ஆனால் அது இப்படித்தான் வரணும். ஒரு மரணத்தின் போது தான் ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதற்கான அடையாளமாக இருக்கும். ஒவ்வொரு நடிகருக்கும் ரசிகர்கள் மாறுபடுவார்கள். சில பேர் அவருடைய நடிப்பை ரசித்திருப்பார்கள். சில பேர் அந்த நடிகருடைய அறிவை ரசித்து இருப்பார்கள். ஆனால் விஜயகாந்த் ரசிகர்கள் எல்லோரும் அவருடைய மனிதநேயத்தை அறிந்தவர்களாக மட்டுமே இருப்பார்கள். அந்த வகையில் அவருடைய தீவிர ரசிகன் நான்.


இப்போது இருந்தே தயாராகுங்கள். விஜயகாந்த் சாரை அடக்கம் செய்வது உங்கள் எல்லோருடைய மனதில் தான். அதனால் தான் உடலளவில் பிரிந்த அவர் நமது மனதளவில் வரப்போகிறார். நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் இன்று ஒரு நாள் மட்டும் அவருக்கு அஞ்சலி செய்யாமல், அவர் செய்த நல்ல காரியங்களை எப்பவுமே செய்ய வேண்டும்.


என் வாழ்க்கையை அவர் தான் ஆரம்பித்து வைத்தார். அதை என்றைக்குமே நான் மறக்க மாட்டேன். இப்படி எல்லோருடைய வாழ்விலும் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறார். நான் கொஞ்ச நாள் முன்னாடி அவருடைய துணைவியாரிடம் சொன்னேன். நீங்க அவருடைய மனைவி மட்டும் என இல்லாமல் அவருடைய தாயாக மாறி அவரை பாதுகாத்ததால் தான் இந்த சோகம் இவ்வளவு தாமதமாக வந்துள்ளது. இல்லையென்றால் இந்த சோகம் முன்னாடியே நமக்கு வந்திருக்கும் என்றேன். அவர் செய்த மனிதநேயத்தை நாம் தொடர வேண்டும் .அதுதான் நாம் அவருக்கு செய்ய வேண்டிய உண்மையான அஞ்சலி என கூறியுள்ளார் பார்த்திபன்.


இயக்குனர் வெற்றிமாறன்


அவர் சினிமாவில் மட்டும் கதாநாயகன் இல்லை. நிஜ வாழ்க்கையிலும் ஒரு கதாநாயகனாகவே வாழ்ந்து நிறைய பேருக்கு ஒரு தலைவராகவும் முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். இன்னைக்கு சினிமாவில் எல்லோருடைய வாழ்க்கையிலும் நல்லது செய்து இருக்கிறார். 


விஜயகாந்த்துடைய இறப்பு, அவருடைய குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும், ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. இந்த நேரத்தில் அவருடைய விருப்பம் என்னவோ, ஆசை என்னவோ, அதை எல்லோரும் சேர்ந்து நின்று நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார் இயக்குநர் வெற்றிமாறன்.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்